‘தவறான எண்ண ஓட்டங்களுக்கு அடிபணிய கூடாது’ - அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

‘தவறான எண்ண ஓட்டங்களுக்கு அடிபணிய கூடாது’ - அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்
Updated on
1 min read

மூட நம்பிக்கைகளுக்கும், தவறான எண்ண ஓட்டங்களுக்கும் அதிகாரிகள் அடிபணிந்து போகக்கூடாது' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவர், தனது வீட்டில் விநாயகர், சிவசக்தி, தஷீஸ்வரி, வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தார். அவர் நடத்தும் பூஜைகளில் அண்டை வீட்டாரும் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்திய பிறகு அப்பகுதிகளில் சிலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவருடைய வீட்டில் இருந்து சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவுப்படி அதிகாரிகள் இன்னும் தன்னிடம் சிலைகளை ஒப்படைக்கவில்லை எனக்கூறி கார்த்திக், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே, சுவாமி சிலைகள் மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதையடுத்து அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது வீட்டில் அனு மதியின்றி கோயில் கட்டியிருந்தால், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். உண்டியல் வைத்து காணிக்கை வசூலில் ஈடுபட்டாலும் அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். ஒருவர் தனது சொந்த இடத்தில் சுவாமி சிலைகளை வைத்து அமைதியான முறையில் வழிபாடு நடத்தினால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் பான்மை முடிவு என்ற ரீதியில் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

மூட நம்பிக்கைகளுக்கும், தவறான எண்ண ஓட்டங்களுக்கும் அதிகாரிகள் அடிபணிந்து போகக்கூடாது. கடவுளோ, சிலைகளோ 5 மனித இனத்துக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை. அதுபோன்ற மூடநம்பிக்கைகளை அதிகாரிகளே வளர்த்துவிடக் கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

‘தவறான எண்ண ஓட்டங்களுக்கு அடிபணிய கூடாது’ - அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்
ஊரப்பாக்கம்: கிரைண்டர் கல்லை போட்டு மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in