சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை கடும் பாதிப்பு: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

தாம்பரம் - கடற்கரை இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதி வழியில் இறங்கி நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. | இடம்: சேத்துப்பட்டு. |

தாம்பரம் - கடற்கரை இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதி வழியில் இறங்கி நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. | இடம்: சேத்துப்பட்டு. |

Updated on
2 min read

சென்னை: குறைக்​கப்​பட்ட சேவை​கள், புதிய இயக்க முறை காரண​மாக கடற்​கரை- தாம்​பரம் வழித்​தடத்​தில் ரயில் சேவை​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர்.

சென்னை - தாம்​பரம் மின்​சார ரயில் வழித்​தடத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக ஏப்​.5-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவை​கள் குறைக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

வழக்​க​மாக தின​மும் 204 முறை எழும்​பூர் வழி​யாக மின்​சார ரயில்கள் இயக்​கப்​படு​கின்​றன. அதாவது, ஒவ்​வொரு 10-12 நிமிடங்​களுக்கு ஒரு ரயில்கள் இயக்​கப்​பட்டு வந்​தன.

இந்​நிலை​யில் பராமரிப்புப் பணி​கள் காரண​மாக எழும்பூரில் வழக்​க​மாக புறநகர் ரயில்கள் நின்று செல்​லும் 10 மற்​றும் 11-வது நடைமேடைக்கு பதிலாக, 5 மற்​றும் 6-வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்​லும் என்​றும், 204 முறை ரயில்கள் இயக்​கப்​படு​வதற்கு பதில், 164 முறை மட்​டுமே இயக்​கப்​படும் எனவும் அறிவிக்​கப்​பட்​டது.

ரயில் சேவை​கள் குறைக்​கப்​பட்​ட​தால் நேற்று காலை முதல் பயணி​கள் பாதிப்​புக்​குள்​ளாகினர். இதற்​கிடையே சிக்​னல் பிரச்​சினை காரண​மாக நேற்று அதி​காலை​யில் இருந்​தே, கடற்​கரை முதல் தாம்​பரம்வரை இயக்​கப்​பட்ட புறநகர் ரயில்கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன.

ஒரே தண்​ட​வாளத்​தில் 2 ரயில்கள் எதிரெ​தி​ராக​வும், ஒன்​றன்​பின் ஒன்​றாக​வும் என பல்​வேறு குளறு​படிகளும் ஏற்​பட்​டன. இதன் காரண​மாகபள்​ளி, கல்​லூரி மாணவர்​கள், அலு​வல​கங்​களுக்கு செல்​வோர் கடும் சிரமத்​துக்கு உள்​ளாகினர்.

<div class="paragraphs"><p>ரயில் சேவை பாதிப்பால் வேலைக்கு சென்று திரும்புபவர்கள் நேற்று அவதிக்குள்ளாயினர். தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. | <em>படம்:எம்.முத்துகணேஷ்</em> |</p></div>

ரயில் சேவை பாதிப்பால் வேலைக்கு சென்று திரும்புபவர்கள் நேற்று அவதிக்குள்ளாயினர். தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. | படம்:எம்.முத்துகணேஷ் |

இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: 5 முதல் 15 நிமிட தாமதம் எழும்​பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரண​மாக புறநகர் ரயில்கள் நின்று செல்​லும் நடைமேடைகள் மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால் கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் நோக்கி செல்​லும் ரயில்கள் எழும்​பூர் அடுத்த சேத்​துப்​பட்​டுக்கு செல்​லும்​போது தண்​ட​வாளங்​களைக் கடக்க வேண்​டும்.

வழக்​க​மான 10 மற்​றும் 11-வது நடைமேடை​யில் செல்​லும்​போது இந்த பிரச்​சினை ஏற்​ப​டாது, தற்​போது விரைவு ரயில்கள் செல்​லும் 5 மற்​றும் 6-வது நடைமேடை​யில் இருந்து புறநகர் செல்​லும் ரயில் தண்​ட​வாளங்​களுக்கு மாறு​வதற்கு கூடு​தல் நேரம் எடுக்​கும்.

அதன்​படி, சேத்​துப்​பட்​டில் இருந்து எழும்​பூருக்​கும், எழும்​பூரில் இருந்து சேத்​துப்​பட்​டுக்​கும் வழக்​க​மாக 2 அல்​லது 3 நிமிடங்​களில் செல்ல வேண்​டிய ரயில் 5 முதல் 15 நிமிடங்​கள் வரை தாமத​மாகிறது. இதனால் ரயில்கள் சேத்​துப்​பட்டு மற்​றும் பூங்கா ரயில் நிலை​யங்​களில் நீண்ட நேரம் காத்​திருக்க வேண்​டிய சூழல் உள்​ளது.

இதன் காரண​மாக ரயில்கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன. இவ்​வாறு அவர்​கள் கூறினர். இந்த ரயில்கள் சேவை குறைப்பு குறித்து கடந்த சில நாட்​களுக்கு முன்பே அறிவிக்​கப்​பட்​டது. அதைத்​தொடர்ந்​து, மாநகரப் போக்​கு​வரத்து கழகம் சார்​பில் ராயபுரம் - கிளாம்​பாக்​கம், தாம்​பரம் - செங்​கல்​பட்டு இடையே கூடு​தலாக 50 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. இருப்​பினும் நேற்று காலை பெரும்​பாலானோர் வழக்​கம்​போல் ரயில்​களில் பயணித்​தனர்.

சேத்​துப்​பட்டு ரயில் நிலை​யத்​தில் ஒரு ரயில் நின்​றிருந்​த​ போது, அதன் பின்​னாலேயே மற்​றொரு ரயில், ரயில் நிலை​யத்​துக்கு வெளியே காத்​திருந்​தது, இதே​போன்​று, பல ரயில் நிலை​யங்​களில் ரயில்கள் அணிவகுத்து நின்​றன.

இதனால் பயணி​கள் ஆங்​காங்கே நின்ற ரயில்​களில் இருந்து கீழே குதித்து ஆபத்​தான முறை​யில்தண்​ட​வாளங்​களில் நடந்து சென்று ரயில் நிலை​யங்​களை அடைந்து பின்​னர் மாற்று போக்​கு​வரத்து சேவை​களைப் பயன்​படுத்​தினர்.

எனவே, ரயில் நிலை​யங்​களில் இது​போன்ற பெரிய அளவி​லான மாற்​றங்​களை செய்​யும்​போது முறை​யாக திட்​ட​மிட்டு பயணி​களுக்கு பா​திப்பு ஏற்​ப​டாத​வாறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை ரயில்​வேநிர்​வாகம்​ மேற்​கொண்​டிருக்​க வேண்​டும்​ என பயணி​கள்​ குற்​றம்​சாட்​டினர்​.

<div class="paragraphs"><p>தாம்பரம் - கடற்கரை இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதி வழியில் இறங்கி நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. | இடம்: சேத்துப்பட்டு. |</p></div>
சென்னையில் பைக் திருடி திருவண்ணாமலையில் விற்பனை செய்த 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in