போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்: ஏஐடியுசி, சிஐடியு வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்: ஏஐடியுசி, சிஐடியு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை போக்குவரத்து கழகத் தொழிலா​ளர்​களுக்​கும் அமல்​படுத்த வேண்​டும்’ என ஏஐடி​யுசி மற்​றும் சிஐடியு வலி​யுறுத்​தி உள்​ளன.

இதுகுறித்து ஏஐடி​யுசி பொதுச்​செய​லா​ளர் ஆறு​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக ஆட்​சி​யில் 2003 ஏப்​ரல் மாதத்​துக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்த தொழிலா​ளர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம்​தான் பொருந்​தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலா​ளர்​களுக்​குப் பொருந்​தாத ஒரு திட்​டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

ஊதிய ஒப்​பந்​தங்​களின்​படி உரு​வான ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அரசாணை மூலம் தடுக்க முடி​யாது என தொடர்ந்து ஏஐடி​யுசி உள்​ளிட்ட அமைப்​பு​கள் குரல் கொடுத்து போராடி வந்​தன. அதைத்​தொடர்ந்​து, 2008-ல் சீரமைப்பு குழு திமுக அரசின்​போது போடப்​பட்​டது. அதில் ஏஐடி​யுசி வலு​வான வாதங்​களை முன்​வைத்​தது.

சீரமைப்பு குழு​வினுடைய பரிந்​துரை​யில் மக்​கள் நல சேவை​யில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​களுக்கு அரசே பொறுப்பு ஏற்று ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என பரிந்​துரைத்​தது. பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் அரசின் பரிசீலனைக்கு பின்பு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​ட​மாக மாற்​றப்​படும் என ஊதிய ஒப்​பந்த சரத்​துகளில் உறுதி அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் அரசுப் பணி​யாளர்​களுக்​கான உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளதை ஏஐடி​யுசி வரவேற்​கிறது. அதே​போல், அரசு போக்குவரத்து கழக தொழிலா​ளர்​களுக்கு அதி​முக அரசால் நிறுத்​தப்​பட்​டுள்ள பழைய ஓய்​வூ​தி​யம் மீண்​டும் வழங்​கப்​படும் என்ற திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தியை அரசு போக்​கு​வரத்து கழக தொழிலா​ளர்​களுக்​கும் செயல்​படுத்த வேண்​டும்.

அரசு போக்குவரத்துக் கழகத்​தில் நிர்​வாக பங்​களிப்​புத் தொகை 12 சதவீதத்தை எடுத்​துக்​கொண்டு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

சிஐடியு பொதுச்​செய​லா​ளர் ஆறு​முக நயி​னார் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அரசு ஊழியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்​குப் பதிலாக உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை தமிழக அரசு அறி​வித்​துள்ள நிலை​யில், 2023-ம் ஆண்டு ஏப்​ரலுக்கு பின் பணி​யில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத் ​திட்​டம் அமுல்​படுத்​தப்​படும் என்று அரசு வெளி​யிட்ட அரசாணையை வாபஸ் பெற்​று, 2023 ஏப்​ரலுக்கு பின் பணி​யில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் கிடைப்​பதை அரசு உறு​திப்​படுத்த வேண்​டும்.

போக்குவரத்து ஊழியர்​களின் ஓய்​வூ​தி​யத் ​திட்​டம், வருங்​கால வைப்​பு நிதி திட்​டத்துக்​குப் பதிலாக உரு​வாக்​கப்​பட்​டது. எனவே, தற்​போது அரசு அறி​வித்​துள்ள உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை மேம்​படுத்தி போக்குவரத்து ஊழியர்​களுக்கும் அமலாக்​க வேண்​டும்​” என்​று கூறி​யுள்​ளார்​.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்: ஏஐடியுசி, சிஐடியு வலியுறுத்தல்
தூத்துக்குடி உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிரம்: போதிய விலை கிடைக்காததால் கவலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in