ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு
Updated on
1 min read

சென்னை: தனி​யார் நிறு​வனத்​தின் நிலம் மற்​றும் கட்​டிடங்​களைச் சாதக​மாக மதிப்​பீடு செய்து வழங்க ரூ. 9 லட்​சம் லஞ்​சம் பெற்ற புகாரில், மத்​திய பொதுப்​பணித்​துறையைச் சேர்ந்த இரண்டு உயர் அதி​காரி​கள் மற்​றும் லஞ்​சம் கொடுத்த தொழில் அதிபர் ஆகிய மூவர் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

மகா​ராஷ்டிரா மாநிலத்​தைச் சேர்ந்த சஞ்​சய் பாபு​ராவ் சின்ச்​கரே, தற்​போது சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பொதுப்​பணித்​துறை​யில் கண்​காணிப்​புப் பொறி​யாள​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவருடன் சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த மஞ்​சு​நாதன் என்​பவர் உதவிப் பொறி​யாள​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.

கடந்த 2022-23 கால​கட்​டத்​தில், இவர்​கள் இரு​வரும் சென்னை வரு​மான வரித்​துறை மதிப்​பீட்​டுப் பிரி​வில் முறையே மாவட்ட மதிப்​பீட்டு அதி​காரி மற்​றும் உதவி மதிப்​பீட்டு அதி​காரி​யாகப் பணி​யாற்றி வந்​தனர்.

இந்​நிலை​யில், திரு​வள்​ளூர் மாவட்​டம் பூண்டி அருகே இயங்கி வரும் ஒரு தனி​யார் நிறு​வனத்​தின் சொத்​துக்​களை மதிப்​பீடு செய்​யும் பணி இவர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

அப்​போது, அம்​பத்​தூர் சிட்கோ தொழிற்​பேட்​டை​யில் உள்ள அந்த நிறு​வனத்​தின் நிலம் மற்​றும் கட்​டிடங்​களுக்​குச் சாதக​மான ஒரு மதிப்​பீட்டு அறிக்​கை​யைத் தயாரித்து வழங்க, சஞ்​சய் பாபு​ராவ், மஞ்​சு​நாதன் ஆகிய இரு​வரும் அந்​நிறு​வனத்​தின் பங்​கு​தா​ர​ரான சுபாஷ் சந்​தர் ராணா​விடம் ரூ. 9 லட்​சம் லஞ்​சம் பெற்று முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக புகார் எழுந்​தது.

இது குறித்து சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரிவு அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்​நிலை​யில், சிபிஐ​யின் முதற்​கட்ட விசா​ரணை​யில் பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அதன்​படி, கடந்த 2023, ஜனவரி 4-ம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்​தில் வைத்​து, சஞ்​சய் பாபு​ரா​வின் அறி​வுறுத்​தலின்​படி மஞ்​சு​நாதன் அந்த ரூ.9 லட்​சம் பணத்​தைப் பெற்​றுக்​கொண்​டார் என்​பது விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, அரசு அதி​காரி​கள் சஞ்​சய் பாபு​ராவ், மஞ்​சு​நாதன் மற்​றும் லஞ்​சம் கொடுத்த சுபாஷ் சந்​தர் ராணா ஆகிய மூவர் மீதும் குற்​றச் சதி மற்​றும் ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் சிபிஐ தற்​போது வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு
மனித உரிமை ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in