சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்: ஐயப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் புதிய தேசிய தலைவர் முருகன் ஆர்.செல்வன். படம்: எல்.சீனிவாசன்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் புதிய தேசிய தலைவர் முருகன் ஆர்.செல்வன். படம்: எல்.சீனிவாசன்

Updated on
1 min read

சென்னை: சபரிமலை தங்​கம் திருட்டு வழக்​கில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்​தின் தேசி​யத் தலை​வர் முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சபரிமலைக்கு உலகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் வரு​வ​தால் சீசன் காலங்​களில் அதிக நெரிசல் ஏற்​படு​கிறது. இதனால், ஐயப்​பனை முறை​யாக தரிசிக்க முடி​யாமல் திரும்​பிச் செல்​லும் நிலை​யும் ஏற்​படு​கிறது.

எனவே, ஒவ்​வொரு பக்​தரும் குறைந்​தது 10 விநாடிகளாவது நின்று தரிசிக்​கும் வகை​யில் கேரள அரசும், தேவசம் போர்​டும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். சபரிமலை​யில் சுத்​த​மான குடிநீர், கழிப்​பறை வசதி, அவசர மருத்​துவ வசதி இல்​லாமல் குழந்​தைகள் முதல் மூத்த குடிமக்​கள் வரை அவதிப்​படு​கின்​றனர்.

இந்த அடிப்​படை தேவை​களை உடனடி​ யாக பூர்த்தி செய்ய தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும். சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கத் திருட்டு வழக்​கில் தொடர்​புடைய அனை​வரும் கட்​டா​யம் சட்​டத்​தின் முன் நிறுத்தி தண்​டிக்​கப்பட வேண்​டும். இது உலகெங்​கும் உள்ள ஐயப்ப பக்​தர்​களின் முக்​கிய​மான கோரிக்​கை​யாகும். அதன்​படி, தங்​கத் திருட்டு வழக்கை நீதி​மன்ற மேற்​பார்​வை​யில் சிபிஐ விசா​ரிப்​ப​தற்கு உத்​தர​விட கேரள காங்​கிரஸ் அரசு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

தமிழகத்​தில் மாற்​றுத் திற​னாளி​கள் பலர் நீண்ட கால​மாக சபரிமலை ஐயப்​பனை தரிசிக்க ஆசையோடு காத்​திருக்​கின்​றனர். சபரிமலைக்கு அவர்​களை இலவச​மாக அழைத்​துச் செல்​லும் யாத்​திரை திட்​டத்தை இந்து சமய அறநிலை​யத் துறை வகுக்க வேண்​டும்.

சபரிமலைக்​குச் செல்​லும் வழி​யில் பல்​வேறு கோயில்​களுக்​கும் பக்​தர்​கள் செல்​கின்​றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்​திருக்க வேண்டி உள்​ள​தால், அவர்​கள் சிரமப்​படு​கின்​றனர். இதை தவிர்க்க, அறநிலை​யத் துறை கோயில்​களில் ஐயப்ப பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்​க வேண்​டும்​.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் புதிய தேசிய தலைவர் முருகன் ஆர்.செல்வன். படம்: எல்.சீனிவாசன்</p></div>
73,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை: பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in