

சென்னை: டெல்லி தலைமை அலுவலகத்தில் 3 நாட்களாக தவெக நிர்வாகிகளிடம் நடைபெற்று வந்த சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, சிடிஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் 29-ம் தேதி ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக கரூர் சம்பவம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்.
அவர்கள் அளித்த பதில்களை வீடியோவாகவும்எழுத்துப்பூர்வமாகவும் பதிவுசெய்து கொண்டனர். அந்தவகையில், தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்தவிசாரணை நேற்று நிறைவடைந்தது. பின்னர் சிடிஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் தரப்பில் அனைத்து விதமான விளக்கங்களையும் கொடுத்திருக்கிறோம். தேவைப்படும் பட்சத்தில், மேலும் விளக்கங்களைக் கேட்டாலும், எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்பதை கூறியிருக்கிறோம்.
உள்ளே நடந்த விசாரணை சம்பந்தமாக பொதுவெளியில் சொல்வது சரியாக இருக்காது. எங்கள் தரப்பில் என்னென்ன நியாயங்கள் இருக்கிறது, தமிழக அரசும் காவல்துறையும் எங்கு தவறு செய்தது என பல்வேறு விஷயங்களை தெரிவித்திருக்கிறோம்.
நிறைய வீடியோ ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம் விஜய்க்கு சம்மன் அனுப்பவாய்ப்பு என்பது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.