நில மோசடி விவகாரத்தில் பழநி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஐடி விசாரணை

விசாரணைக்கு ஆஜராக வந்த பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து.

விசாரணைக்கு ஆஜராக வந்த பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து.

Updated on
2 min read

திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி விவ​காரம் தொடர்​பாக திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் பழநி கோயில் இணை ஆணை​ய​ராகப் பணிபுரிந்து பதவி உயர்​வில் சென்னை சென்ற மாரி​முத்து நேற்று சிபிசிஐடி எஸ்பி சாஜிதா முன்​னிலை​யில் ஆஜரா​னார்.

பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​பிலான நிலம், ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்​யப்​பட்​டது குறித்து பழநி கோயில் நிலங்​கள் பிரிவு கண்​காணிப்​பாளர் ச.முரு​கானந்​தம் அளித்த புகாரில் திண்​டுக்​கல் மாவட்ட சிபிசிஐடி போலீ​ஸார் சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், அறக்​கட்​டளை பிர​முகர் முரு​க​தாஸ் உள்​ளிட்ட 4 பேர் மீது கூட்​டுச்​ச​தி, மோசடி உள்​ளிட்ட 5 பிரிவு​களில் வழக்​குப் பதிந்து விசா​ரணை​யைத் தொடங்​கினர்.

பழநி​யில் பிரச்​சினைக்​குரிய இடம் உள்ள பகு​தி, பழநி பத்​திரப்ப​திவு அலு​வல​கம் ஆகிவற்​றுக்​குச் சென்று சிபிசிஐடி எஸ்பி சாஜிதா விசா​ரணை நடத்​தி​னார். கடந்த வெள்​ளிக்​கிழமை திண்​டுக்​கல்​லில் உள்ள சிபிசிஐடி அலுவல​கத்​தில் புகார்​தா​ரர் முரு​கானந்​தம் உள்​ளிட்ட அறநிலை​யத் துறை அதி​காரி​கள், வரு​வாய்த் துறை​யினர் ஆகியோரிடம் விசா​ரணை தொடங்​கியது.

இதைத் தொடர்ந்து திண்​டுக்​கல் ரவுண்ட்​ரோடு பகு​தி​யில், இந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​ட​னுக்கு சொந்​த​மான வீடு, நிலத்தை விற்ற விழுப்​புரத்​தில் உள்ள முரு​க​தாஸ் வீடு ஆகிய​வற்​றில் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

விசா​ரணை​யின் தொடர்ச்​சி​யாக நேற்று திண்​டுக்​கல்​லில் உள்ள சிபிசிஐடிஅலு​வல​கத்​தில் பழநி கோயில் இணை ஆணை​ய​ராகப் பணிபுரிந்​து, பதவி உயர்​வில் சென்னை சென்ற மாரி​முத்து விசா​ரணைக்கு ஆஜரா​னார்.

இவரை தொடர்ந்து பழநி கோயில் கண்​காணிப்​பாளர் முரு​கானந்​தம், அறநிலை​யத் துறை ஆய்​வாளர் சிவனேசன், கோயில் செயல் அலு​வலர் கணபதி உள்​ளிட்ட அறநிலை​யத்துறை​யில் பணிபுரி​யும் அலு​வலர்​களும் நேற்று ஆஜராகினர்.

பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்ட நிலம் குறித்து தங்​களிடம் உள்ள ஆவணங்​களை அறநிலை​யத்துறை ஊழியர்​கள் விசா​ரணைக்கு எடுத்​துச் சென்​றனர். மேலும் வரு​வாய்த் துறை​யில் வட்​டாட்​சி​யர், கிராம நிர்​வாக அலு​வல​ராகப் பணிபுரிந்து ஓய்​வு​ பெற்​று, தற்​போது பழநி கோயி​லில் பணிபுரி​யும் மாரியப்​பன், சின்​னச்​சாமி ஆகியோரிட​மும் போலீ​ஸார் விசா​ரித்தனர்.

இந்த விவகாரத்தில் போலீ​ஸார் பல பிரிவு​களாகப் பிரிந்து பத்திரப்பதிவு அலு​வலகம் உள்ளிட்​டவற்றில் விசா​ரணையில் ஈடு​பட்​டுள்​ளனர். இணை ஆணை​யர் மாரி​முத்து உள்​ளிட்ட அறநிலை​யத் துறை அதி​காரி​களிடம் சுமார் 7 மணி நேரம் விசா​ரணை நடந்​தது. விசா​ரணை முடிந்து வெளியில் வந்த முன்​னாள் இணை ஆணையர் மாரிமுத்து கூறும்போது, 1880 ஆண்டு முதல் நில ஆவணங்கள், மேலும் சில ஆவணங்​களை சிபிசிஐடி போலீஸாரிடம் விசா​ரணைக்காக கொடுத்​துள்​ளோம்​ என்றார்.

நிலம் வாங்கியவர் முன்ஜாமீன் கோரி மனு

பழநி கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்தை மோசடி​யாக பதிவு செய்​தது தொடர்​பான வழக்கில் உடுமலை பாப்​பான்​குளத்​தைச் சேர்ந்த வெள்​ளத்​துரை உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்​கல் செய்தார். அதில் அவர், பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான 1.4 ஏக்​கர்நிலத்தை மோசடி​யாக பதிவு செய்த​தாக என் மீது போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர். தற்போது அந்​தப் பத்​திரப்​பதிவு ரத்து

செய்​யப்​பட்​டுள்​ளது. போலீஸ் விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு வழங்கிவரு​கிறேன். எனவே முன்​ஜாமீன் தர வேண்​டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசா​ரணைக்கு வந்​தது. பின்னர் நீதிபதி மனு​வில் சிபிசிஐடி போலீஸை எதிர்​மனு​தா​ர​ராக சேர்க்க உத்​தர​விட்டு விசா​ரணையை இன்​றைக்கு தள்​ளி​வைத்தார்​.

<div class="paragraphs"><p>விசாரணைக்கு ஆஜராக வந்த பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து.</p></div>
“நாடாளுமன்றத்துக்குள் கும்பல் தாக்குதல் நடக்குமோ என பயந்தோம்” - கங்கனா பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in