சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேர் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த வழக்கு

சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேர் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த வழக்கு
Updated on
1 min read

மதுரை: ​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை​யில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்​கும் விசா​ரணை நீதி​மன்​றம் விதித்த தூக்​குத் தண்​டனையை உறு​திப்​படுத்​தக் கோரிய வழக்​கில், அனை​வரும் பதிலளிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்த ஜெய​ராஜ், அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர், கரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பின்​னர் உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக, சிபிஐ கொலை வழக்​குப் பதிவு செய்து காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்​கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லதுரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலு​முத்து ஆகிய 9 பேரை கைது செய்​தனர்.

சிபிஐ மனுதாக்கல்

இந்த வழக்​கை, மதுரை முதலா​வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. விசா​ரணை முடிந்த நிலை​யில், காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்​கும் தூக்​குத் தண்டன விதித்​து, ஏப்​ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

இந்த தூக்குத் தண்​டனையை உறுதி செய்​யக் கோரி, தமிழக அரசு மற்​றும் சிபிஐ தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஆனந்த் வெங்​கடேஷ், ராம கிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. ஸ்ரீதர் உள்பட 9 பேரும் மதுரை மத்​திய சிறை​யில் இருந்த நிலை​யில், காணொலி மூலம் நீதி​மன்​றத்​தில் ஆஜராகினர்.

அவர்​களிடம் நீதிப​தி​கள், சாத்தான்குளம் வழக்​கில் விசா​ரணை நீதி​மன்​றம் விதித்த தூக்​குத் தண்​டனையை உறு​திப்​படுத்த சிபிஐ தரப்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது எனத் தெரி​வித்​தனர்.

அதற்கு ஸ்ரீதர் தரப்பு வழக்​கறிஞர், வழக்கு தொடர்​பான உரிய ஆவணங்​களை சிபிஐ அளிக்​க​வில்லை எனக் கூறி​னார். பின்​னர் நீதிப​தி​கள், உத்​தரவு நகலை வைத்து முதலில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யுங்​கள், அதன் பிறகு உரிய ஆவணங்​கள் வழங்​கப்​படும். மேலும், சிபிஐ தாக்​கல் செய்​துள்​ள மேல்​முறை​யீட்​டு மனுவுக்​கு பதிலளிக்​க வேண்​டும்​ என்​று கூறி, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​தனர்​.

சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேர் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த வழக்கு
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்: போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் பணிந்திர ரெட்டி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in