சாலைப் பணிகளை செய்யாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக புகார்: எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு வட்டம் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு வட்டம் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ளாமலே ஒப்​பந்​த​தா​ரர்​கள் ரூ.3.23 கோடி பெற்​ற​தாக எழுந்த புகார் தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, அரசு அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். வேலு மற்​றும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம் முழு​வதும் 20 இடங்​களில் நேற்று தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது.

தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறை​யில் கடந்த 2022 ஏப்​.20-ம் தேதி ஒரு புகார் அளிக்​கப்​பட்​டது. அதில், ‘கடந்த 2022 மார்ச் மாதத்​தில் தமிழ்​நாடு மாநில நெடுஞ்​சாலைத் துறை​யின் பல பிரிவு​களில், பணி​கள் மேற்​கொள்​ளப்​ப​டாத நிலை​யிலேயே ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு பல கோடி ரூபாய் வழங்​கப்​பட்​டுள்ளது.

நெடுஞ்​சாலைத் துறை அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​களின் கூட்​டுச் செய​லால் இந்த மோசடி நடந்​துள்​ளது. இதுத​விர, மாநில நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ள​வும், சீரமைக்​க​வும் ஆண்​டு​தோறும் வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் கோடி நிதி​யிலும் ஊழல், முறை​கேடு நடக்கிறது. எனவே, சம்​பந்​தப்​பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டும்’ என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதை தொடர்ந்​து, இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் சமீபத்​தில் விசா​ரணை​யைத் தொடங்​கினர். இதில் பல முக்​கிய தகவல்​கள் தெரிய​வந்​தன. கடந்த 2022-ல் மாநில நெடுஞ்​சாலைகளில் பராமரிப்பு பணி​களை மேற்​கொள்ள தனி​யார் நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, வாராணசி - கன்​னி​யாகுமரி சாலை, மண்​மங்​கலம், நன்​னியூர் சாலை ஆகிய​வற்​றின் தரத்தை மேம்​படுத்​த​வும், நெரூர் - தளவாய்​பாளை​யம் சாலை, கரூர் விரி​யம்​பட்டி சாலை ஆகிய​வற்றை அகலப்​படுத்​தும் பணி​களை மேற்​கொள்ள இந்த ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டது.

இந்த 4 சாலைகளுக்​கும் அனு​ம​திக்​கப்​பட்ட தொகை ரூ.4.19 கோடி. இந்த சாலைகளில் கடந்த 2022 மார்ச் வரை எந்த பணி​யும் நடை​பெற​வில்​லை. ஆனால், மேற்​கண்ட சாலைகளுக்​கான தொகை​யில் 77 சதவீதம், அதாவது ரூ.3.23 கோடி அளவுக்கு பணம் கடந்த 2022 மார்ச் 25 மற்​றும் 28-ம் தேதி​களில் 2 தவணை​களாக ஒப்பந்த நிறுவனத்துக்கு செலுத்​தப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக 4 அதி​காரி​கள் பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதன்​மூலம் ஒப்​பந்​த​தா​ரர் நியாயமற்ற முறை​யில் ஆதாயமடைந்து இருப்​பதும் தெரிய​வந்​தது.

7 பிரிவுகளில் வழக்கு: இதுதொடர்​பாக முதல்​கட்ட ஆதா​ரங்​கள் கிடைத்​ததன் அடிப்​படை​யில், தமிழக நெடுஞ்​சாலைத் துறை மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​ச​ராக இருந்த எ.வ.வேலு, நெடுஞ்​சாலைத் துறை அதி​காரி​களாக இருந்த கண்​ணன், பூபாலன் சிங், பெரிய​சாமி, சத்​தி​ய​பா​மா, நிதிலன், ரஃபீக் முகமது, தீபி​கா, கார்த்​திக், சத்யா மற்​றும் சங்​கர் ஆனந்த் இன்ஃப்ரா (ஒப்​பந்​த​தா​ரர்) ஆகிய 11 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. குற்​றச் சதி, நம்​பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்​பு, கூட்டு சதி, ஊழல் தடுப்பு என 7 பிரிவு​களின்​கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக, சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு வீடு, திரு​வண்​ணா​மலை அடுத்த தென்​மாத்​தூர் பகு​தி​யில் அருணை பொறி​யியல் கல்​லூரி வளாகத்​தில் உள்ள அவரது வீடு, அலு​வல​கம், அருணை மருத்​து​வக் கல்​லூரி, பொறி​யியல் கல்​லூரி, கம்​பன் மகளிர் கலைக் கல்​லூரி, ஜீவா வேலு சிபிஎஸ்இ பள்ளி ஆகிய இடங்​களில் சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீ​ஸார் 30-க்​கும் மேற்​பட்​டோர் 7 குழுக்​களாகப் பிரிந்து சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அதேபோல, எ.வ.வேலு​வின் சொந்த கிராம​மான தண்​ட​ராம்​பட்டு அடுத்த சே.கூடலூரில் உள்ள அவரது வீடு, திரு​வண்​ணா​மலை சட்​ட​நாயக்​கன் தெரு​வில் உள்ள திமுக தலைமை செயற்​குழு உறுப்​பினர் இரா.ஸ்ரீதரன் வீடு, கரூர் பழனியப்பா தெரு​வில் வசிக்​கும் ஒப்​பந்​த​தா​ரரும், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் நண்​பரு​மான எம்​.சி.சங்​கர் ஆனந்​தின் வீடு, அலுவலகம் உட்பட 11 பேர் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

ரூ.40 லட்​சம் பறி​முதல்: இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: சென்​னை​யில் 4 இடங்​கள், திரு​வண்​ணா​மலை - 4, கரூர் - 7, திண்​டுக்​கல் - 2, கோவை - 2, திருப்​பூர் - 1 என மொத்​தம் 20 இடங்​களில் சோதனை நடந்​தது. சோதனை​யின் போது, நெடுஞ்​சாலைத் துறை தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள், டிஜிட்​டல் சான்​றுகள், சொத்து மதிப்பு மற்​றும் முறை​கேட்டை உறு​திப்​படுத்​தும் பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் கணக்​கில் வராத ரூ.40 லட்​சம் பறி​முதல்​ செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மேல்​ வி​சா​ரணை தீவிர​மாக நடந்​து வரு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

‘சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ - இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் செயல்பட்டுள்ளனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.

<div class="paragraphs"><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு வட்டம் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.</p></div>
14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in