பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: சிஇஓ, தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: சிஇஓ, தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

திருவள்ளூர்: ஆர்​.கே.பேட்​டை, கொண்​டாபுரம் அரசு பள்​ளி​யில் சுவர் இடிந்து விழுந்​து, 7-ம் வகுப்பு மாணவர் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக பள்ளி தலை​மை​யாசிரியர், மாவட்ட கல்வி அலு​வலர், மாவட்ட முதன்மை கல்வி ஆலு​வலர் ஆகிய 3 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். மாணவரின் குடும்​பத்​துக்கு நிவாரண​மாக ரூ.1 கோடி, அரசு பணி வழங்​கக் கோரி, போராட்​டத்​தில் ஈடுபட்டனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆர்​. கே.பேட்டை அருகே கொண்​டாபுரம் அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில், நேற்று முன்​தினம் மதிய உணவு இடைவேளை​யின் போது, 7-ம் வகுப்பு மாணவ​ரான சரத்​கு​மார் மகன் மோகித் (11), பள்ளி நடைமேடை பகு​தி​யில் சத்​துணவு அருந்தி கொண்​டிருந்த போது, கைப்​பிடிச் சுவர் இடிந்​து, மோகித் மீது விழுந்​தது. இதில், படு​காயமடைந்த மோகித் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இச்சம்​பவம் தொடர்​பாக, ஆர்​.கே.பேட்டை போலீ​ஸார், பள்ளி தலை​மை​யாசி​யர் தியாக​ராஜன், மாவட்ட கல்வி அலு​வலர் அமு​தா, மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் கற்​பகம் ஆகிய 3பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, உயி​ரிழந்த மாணவரின் குடும்​பத்​துக்கு நிவாரண​மாக ரூ.1 கோடி மற்​றும் அரசு பணி வழங்க கோரி, திருத்​தணி அரசு மருத்​து​வ​மனை​யில் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்​குட்​படுத்த, பெற்​றோர், உறவினர்​கள் மறுத்​து, நேற்று முன் தினம் நள்​ளிரவு முதல் போராட்​டத்​தில் ஈடுபட தொடங்​கினர்.

நேற்று மதி​யத்​துக்கு மேல் நீடித்த வண்​ணம் இருந்த இந்த போராட்​டத்​தில், மாணவரின் பெற்​றோர், உறவினர்​கள் மட்​டுமல்​லாமல், பகுஜன் சமாஜ் கட்​சி, புரட்சி பாரதம், விசிக, தவெக, பாஜக உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் சார்பில் நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

இதுகுறித்​து, தகவலறிந்த அமைச்​சர் சா.​மு.​நாசர், மாவட்ட ஆட்​சி​யர் பிர​தாப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டோரை சமா​தானப்​படுத்த முயன்​றும் பயனில்​லை. இதையடுத்​து, அமைச்​சர் சா.​மு.​நாசர், மாவட்ட ஆட்​சி​யர், திருத்​தணி எம்​எல்ஏ சந்​திரன் உள்​ளிட்​டோர், திருத்​தணி கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில், மாணவனின் பெற்​றோர், அரசி​யல் கட்சி நிர்வாகி​ களிடம் பேச்சு நடத்தினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்: அதில், மாணவரின் குடும்​பத்​துக்கு முதலமைச்​சரின் பொது நிவாரண நிதியி​லிருந்து ரூ.5 லட்​சம் மற்​றும் எம்​எல்ஏக்கள் நிதி ரூ.5 லட்​சம் என, ரூ.10 லட்​சம் வழங்​க​வும், ஒப்​பந்த அடிப்​படை​யில் ஆர்​. கே.பேட்டை ஊராட்சி ஒன்​றிய அலு​வலக உதவி​யாளர் பணி​யும் வழங்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டது.

அதன் படி, மாணவரின் தந்தை சரத்​கு​மாரிடம் ரூ.10 லட்​சம் மற்​றும் பணி நியமன ஆணையை அமைச்​சர் சா.​மு.​நாசர் வழங்​கி​னார். இதையடுத்​து, சுமார் 15 மணி நேரத்​துக்கு மேல் நீடித்த போராட்​டம் முடிவுக்கு வந்​து, நேற்று மாலை மாணவர் மோகித்​தின் உடல் பிரேத பரிசோதனைக்​குட்​படுத்​தப்​பட்​டு, பெற்​றோர் மற்​றும் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்பட்டது.

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: சிஇஓ, தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.67 அடியாக குறைந்தது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in