தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வழக்கு

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வழக்கு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் புலம்பெயர் தொழிலா​ளர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் பல்​வேறு மாவட்​டங்​களில் வடமாநில புலம்பெயர் தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர்.

புலம்பெயர் தொழிலா​ளர்​கள் மீது தாக்​குதல் சம்​பவங்​கள் அவ்​வப்​போது நடக்​கின்​றன. சமீபத்​தில், திருத்​தணி​யில் மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த தொழிலாளி மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இது தமிழகத்​தின் சட்​டம், ஒழுங்கை கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது.

இது​போன்ற குற்​றச்​செயல்​களுக்கு போதைப்​பொருள் பயன்​பாடும் ஒரு முக்​கிய காரண​மாக உள்​ளது. இதனால், தமிழகத்​தில் பணிபுரி​யும் புலம்பெயர் தொழிலா​ளர்​கள் ஊதி​யம், வேலை நேரம் மற்​றும் பாது​காப்பு விதி​முறை​கள் தொடர்​பான சட்​டங்​களை கடுமை​ யாக அமல்​படுத்த வேண்​டும்.

அனைத்து புலம்பெயர் தொழிலா​ளர்​களை​யும் பதிவு செய்​து, அடை​யாள அட்டை வழங்க வேண்டும். விபத்​துக் காப்​பீடு போன்ற சமூக பாது​காப்பு நிதி திட்​டங்​கள், புலம்பெயர் தொழிலா​ளர்​களின் குறை​களை நிவர்த்தி செய்ய மாநில மற்​றும் மாவட்ட அளவில் புலம்பெயர் தொழிலா​ளர் ஆலோ​சனைக் குழுவை நியமிக்​க​வும், புலம்பெயர் தொழிலா​ளர்​கள் அதி​கள​வில் உள்ள பகு​தி​களில் ரோந்​துப் பணியை தீவிரப்​படுத்​த​வும், போதைப்​பொருள் கடத்​தலை கட்​டுப்​படுத்​த​வும் நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும்.

இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், “தமிழகம் முழு​வதும் புலம்​ பெயர் தொழிலா​ளர்​கள் உள்​ளனர். அவர்​களுக்கு மிகக் குறை​வான அளவிலேயே ஊதி​யம் வழங்​கப்​படு​கிறது. சமீப​கால​மாக புலம்பெயர் தொழிலா​ளர்​கள் தாக்​கப்​படு​கின்​றனர்’ என தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், “அந்த ஊதி​யம்​கூட அவர்​கள் சொந்த ஊரில் வழங்​கப்​பட​வில்​லை. ஒரு நிகழ்வை மட்​டும் அடிப்​படை​யாக வைத்து நடவடிக்கை எடுக்​கக் கூற​முடி​யாது. புலம்பெயர்ந்த தொழிலா​ளர்​களை குறி​வைத்து திட்​ட​மிட்டு தாக்​குதல் எது​வும் நடத்​தப்​பட​வில்லை என அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றனர். பின்​னர் நீதிப​தி​கள், மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை ஜன.22-க்கு தள்​ளிவைத்​தனர்​.

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வழக்கு
‘தை பிறக்கட்டும்’ - கூட்டணி குறித்து ஓபிஎஸ் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in