அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு

நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. மனு தாக்கல்
அமைச்சர் கே.என்.நேரு | கோப்புப் படம்
அமைச்சர் கே.என்.நேரு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அமலாக்​கத் துறை குற்​றச்​சாட்​டின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு​வுக்கு எதி​ராக ஊழல் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்த வேண்​டும் என்று உத்​தர​விடக் கோரி, அதி​முக எம்​.பி. இன்​பதுரை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:

ரூ.1,000 கோடி ஊழல்: தமிழக நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை அமைச்​ச​ராகப் பதவி வகிக்​கும் கே.என்​.நேரு, சுமார் 2 ஆயிரத்து 588 பணி​யிடங்​களை சட்​ட​விரோத​மாக நிரப்​பி​யுள்​ளார் என்​றும், இதற்​காக ரூ.25 லட்​சம் முதல் ரூ. 35 லட்​சம் வரை லஞ்​சம் பெற்​றுள்​ள​தாக​வும், இதன் மூலம் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேலாக ஊழல் செய்​துள்​ள​தாக​வும் அமலாக்​கத் துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இந்த குற்​றச்​சாட்​டின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​. நேரு, அவரது சகோ​தரர் ரவிச்​சந்​திரன் உள்​ளிட்​டோரின் வீடு​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தி, ஆவணங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.

அரசுப் பணி​களை லஞ்​சம் வாங்​கிக் கொண்டு நிரப்​பி​யுள்​ளது தொடர்​பாக அமைச்​சர் நேரு மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது ஊழல் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரிக்​கக் கோரி லஞ்ச ஒழிப்​புத் துறை​யிடம் புகார் அளித்​தும், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, டிச. 13-ம் தேதி அளிக்​கப்​பட்ட புகாரின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு உள்​ளிட்​டோர் மீது வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்​து​மாறு லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது.

அமைச்சர் கே.என்.நேரு | கோப்புப் படம்
“திமுகவை தவிர வேறு யாரும் எதிரிகள் இல்லை” - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in