திமுகவில் வேட்பாளர் தேர்வு மும்முரம்: அறிவாலயத்தில் தொடங்கியது நேர்காணல்

திமுக சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சட்டப்பேரவை தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் எல் சீனிவாசன்

திமுக சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சட்டப்பேரவை தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் எல் சீனிவாசன்

Updated on
1 min read

சட்​டப்​பேரவை தேர்​தலில் புதுச்​சேரி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிட விருப்ப மனு அளித்​தவர்​களுக்கு நேற்று அண்ணா அறி​வால​யத்​தில் நேர்​காணல் நடத்​தப்​பட்​டது.

தமி​ழ​கத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெறவுள்​ளது. புதுச்​சேரி​யில் ஏப்​ரல் 9-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இதையடுத்து ஆளும் கட்​சி​யான திமுக தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

இதனிடையே திமுக-​வில், தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​கான விருப்ப மனுக்​கள் கடந்த பிப்​ர​வரி 20 முதல் மார்ச் 6-ம் தேதி வரை பெறப்​பட்​டன. இதில் அமைச்​சர்​கள், மூத்த நிர்​வாகி​கள், இளைஞரணி பொறுப்​பாளர்​கள் என 15,372 பேர் விருப்ப மனுக்​களை வழங்​கி​யிருந்​தனர்.

இந்​நிலை​யில், விருப்ப மனு அளித்​தவர்​களுக்​கான நேர்​காணல் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று தொடங்​கியது. முதல் நாளில் புதுச்​சேரி தொகு​தி​களில் போட்​டி​யிட விருப்ப மனுக்​கள் வழங்​கிய 116 பேர்​களிடம் நேர்​காணல் நடத்​தப்​பட்​டது.

திமுக தலை​வர் மு.க ஸ்டா​லின், பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்​மைச் செய​லா​ளர் கே.என்​.நேரு, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, புதுச்​சேரி மண்டல பொறுப்​பாளர் ஜெகத்​ரட்​சகன் எம்பி ஆகி​யோர் அடங்​கிய குழு விருப்​ப மனு அளித்​தவர்​களிடம் தனித்​தனி​யாக நேர்​காணல் நடத்​தி​யது. அப்​போது தொகுதி நில​வரம், வெற்றி வாய்ப்​பு, தேர்​தல் செல​வு​கள் உள்​ளிட்ட விவரங்​களை முதல்​வர் ஸ்டா​லின் கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

புதுச்​சேரி தேர்​தலில் காங்​கிரஸுடன் தொகு​திப் பங்​கீடு இன்​னும் நிறைவடை​யாத நிலை​யில், அங்கு விருப்​ப மனு அளித்​தவர்​களிடம் திமுக நேர்​காணல் நடத்தி இருக்​கிறது.

புதுச்​சேரியை தொடர்ந்து தமி​ழ​கத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்​கான வேட்​பாளர் நேர்​காணல் இன்று (மார்ச் 18) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது அதே​போல், தேர்​தல் முடிவு வெளி​யாகும் நாளுக்​கான கவுன்ட்​ட​வுன் டிஜிட்​டல் திரை​யும் அறி​வால​யம் வளாகத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>திமுக சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சட்டப்பேரவை தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் எல் சீனிவாசன்</p></div>
234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் தவெக? - நான்கு முனை போட்டிக்கு தயாராகும் தமிழகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in