ஆயுள் கைதிகள் விடுதலை: அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியுமா? - தீர்ப்பு தள்ளிவைப்பு

ஆயுள் கைதிகள் விடுதலை: அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியுமா? - தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: ஆ​யுள் தண்​டனை கைதி​களை முன்​கூட்டி விடு​தலை செய்​யும் வகை​யில் அமைச்​சரவை விடுக்​கும் பரிந்​துரைகளை நிராகரி்க்க ஆளுநருக்கு அதி​காரம் உள்​ள​தா? என்​பது குறித்த சட்​டப்​பூர்வ கேள்விக்​கான வழக்​கின் தீர்ப்பை உயர் நீதி​மன்ற முழு அமர்வு தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​துள்​ளது.

சிதம்​பரம் அண்​ணா​மலை பல்​கலைக்​கழகத்​தில் மருத்​து​வம் படித்து வந்​த மாணவர் நாவரசுவை, கடந்த 1996-ம் ஆண்டு சீனியர் மாணவ​ரான ஜான் டேவிட் கொலை செய்த சம்​பவம் தமிழகம் முழு​வதும் பரபரப்​பாக பேசப்​பட்​டது. இந்த வழக்​கில் ஜான் டேவிட்​டுக்கு கடலூர் சிறப்பு நீதி​மன்​றம் அளித்த ஆயுள் தண்​டனையை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்தது.

புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ள ஜான் டேவிட்டை முன்​கூட்​டியே விடுவிக்​கக் கோரி அவரது தாயார் எஸ்​தர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை கடந்த 2024-ம் ஆண்டு விசா​ரித்த நீதிப​தி​கள், “அமைச்​சர​வை​யின் முடிவுக்கு ஆளுநர் கட்​டுப்​பட்​ட​வர் என்ற அடிப்​படை​யில் ஆயுள் தண்​டனை கைதி​யான ஜான் டேவிட்டை முன்​கூட்டி விடு​தலை செய்​யக்​கோரும் மனுவை தமிழக அரசு மீண்​டும் பரிசீலிக்க வேண்​டும்” என உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி, ஜான் டேவிட்டை முன்​கூட்டி விடு​தலை செய்ய தமிழக அரசு அளித்த பரிந்​துரையை ஆளுநர் மீண்​டும் நிராகரித்​தார். இதை எதிர்த்து ஜான் டேவிட்​டின் தாயார் எஸ்​தர், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இதே​போல ஆயுள் தண்​டனை கைதி​களை முன்​கூட்டி விடு​தலை செய்​யக்​கோரும் தமிழக அரசின் பரிந்​துரையை ஆளுநர் நிராகரித்​ததை எதிர்த்து பலரும் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

இதற்​கிடையே ஆயுள் தண்​டனை கைதி​களை விடுவிக்​கும் விவ​காரத்​தில் அரசின் பரிந்​துரைகளை நிராகரிக்க ஆளுநருக்கு அதி​காரம் உள்​ளது என உயர் நீதி​மன்ற மதுரை கிளை மற்​றொரு வழக்​கில் தீர்ப்​பளித்​த​தால், அரசின் பரிந்​துரைகளை நிராகரி்க்க ஆளுநருக்கு அதி​காரம் உள்​ளதா என்​பது குறித்த சட்​டப்​பூர்வ கேள்​வி்க்​கான விசா​ரணை 3 நீதிப​தி​கள் அடங்​கிய முழு அமர்​வுக்கு மாற்​றப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஆளுநருக்​கான அதி​காரம் தொடர்​பான வழக்​கின் விசா​ரணை, நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, ஜி.கே.இளந்​திரையன், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய முழு அமர்​வில் நடந்​தது. அப்​போது மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “உச்ச, உயர்நீதி​மன்ற தீர்ப்​பு​களின் அடிப்​படை​யில் ஆயுள் தண்​டனை கைதிகளை முன்​கூட்டி விடுதலை செய்ய அமைச்​சரவை விடுவிக்​கும் பரிந்​துரைகளை நிராகரிக்க ஆளுநருக்கு அதி​காரம் இல்​லை” என வாதிட்​டார்.

பதி​லுக்கு மத்​திய அரசு தரப்​பில், “இந்த விவ​காரத்​தி்ல் ஆளுநருக்​கென தனிப்​பட்ட அதி​காரம் உள்​ளது என்​ப​தால்​தான் அதை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யும் உறுதி செய்​துள்​ளது” என வாதிடப்​பட்​டது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட முழு அமர்வு நீதிப​தி​கள், இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி வைத்​துள்​ளனர்​.

ஆயுள் கைதிகள் விடுதலை: அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியுமா? - தீர்ப்பு தள்ளிவைப்பு
“ஈரான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in