“செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார்” - புஸ்ஸி ஆனந்த் புதுத் தகவல்

ஈரோட்டில் தவெக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோருக்கு தவெகவினர் வாள் வழங்கினர்.

ஈரோட்டில் தவெக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோருக்கு தவெகவினர் வாள் வழங்கினர்.

Updated on
1 min read

தவெக தலை​வர் விஜய் பங்​கேற்​கும் மக்​கள் சந்​திப்பு பிரச்​சா​ரக் கூட்​டம் பெருந்​துறையை அடுத்த விஜயமங்​கலம் சுங்​கச்​சாவடி அருகே சரளை என்ற இடத்​தில், வரும் 18-ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், பிரச்​சார கூட்​டத்​துக்​கான ஏற்​பாடு​கள் குறித்​து, தவெக சார்​பில் கட்​சி​யினர் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் ஈரோடு அடுத்த வேப்​பம்​பாளை​யம் தனி​யார் மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் தவெக பொதுச்​செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்​டையன் ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.

கூட்​டத்​தில் செங்​கோட்​டையன் பேசி​ய​தாவது: எனது 50 ஆண்டு கால அரசி​யல் வாழ்க்​கை​யில் பொதுச்​செய​லா​ளரை உரு​வாக்​கிய நான், சாதாரண உறுப்​பின​ராக இருக்​கக்​கூட தகு​தி​யற்​றவன் என நான் இருந்த கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டேன். தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ராவதை எந்த சக்​தி​யாலும் தடுக்க முடி​யாது. அவருக்கு மக்​கள் சக்தி உள்​ளது. மக்​களுக்கு சேவை செய்​வதற்​காக, ரூ. 500 கோடி வரு​மானத்தை உதறி​விட்டு வந்​தவர் விஜய்.

எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகி​யோரை அடுத்து விஜய்யை முதல்​வ​ராக்க வேண்​டும் என நினைக்​கிறேன். அதற்​காக அவர் தலை​மையை ஏற்று வந்​துள்​ளேன். என்​னுடைய ரத்​தத்​தில் விஜய்யை முதல்​வ​ராக ஆக்க வேண்​டும் என்ற எண்​ணம் ஓடு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் பேசி​ய​தாவது: விஜய்​யின் முதல் ரசிகர் மன்​றம் ஈரோட்​டில் தான் தொடங்​கப்​பட்​டது. நமது கொள்கை தலை​வர் வாழ்ந்த இடம் ஈரோடு. செங்​கோட்​டையன் என்ன சொல்​கி​றாரோ அதன்​படி நாங்​கள் செயல்​படத் தயா​ராக இருக்​கி​றோம். எங்​களை நம்பி வந்​தவர்​களை கடைசி வரை நாங்​கள் கைவிட மாட்​டோம்.

2026-ல் விஜய்யை முதலமைச்​ச​ராக்க எந்த தியாகத்​தை​யும் செய்​யத் தயா​ராக இருக்​கிறேன். நமக்கு எதி​ராக உள்ள அரசி​யல் கட்சி பிர​முகர்​களின் வீடு​களி​லும் நமக்கு ஆதரவு உள்​ளது. செங்​கோட்​டைய​னிடம் பொறுப்​பு​களை ஒப்​படைத்து விட்​டோம். தொகு​தி​களில் வெற்​றியை பெற்​றுத் தர வேண்​டியது அவரது பொறுப்​பு.

முழு​மை​யாக அவரை​யும், அவருடன் இருப்​பவர்​களை​யும் ஏற்​றுக் கொண்​டோம். செங்​கோட்​டையன் போடும் ரூட்​டில் விஜய் பயணிப்​பார். சிரமப்​பட்டு பிரச்​சா​ரக் கூட்​டத்​துக்கு அனு​மதி பெற்​றுள்​ளார். அவரிடம் நிறைய கற்​றுக் கொள்​ள வேண்​டியது இருக்​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>ஈரோட்டில் தவெக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோருக்கு தவெகவினர் வாள் வழங்கினர்.</p></div>
“உதயநிதி இன்னும் அப்டேட் ஆகவில்லை” - ஜெயக்குமார் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in