உடலை மாற்றி நடந்த பிரேத பரிசோதனையால் குழப்பம்: அடையாளம் தெரியாத சடலத்துக்கு சடங்கு - உறவினர்கள் அதிர்ச்சி

உடலை மாற்றி நடந்த பிரேத பரிசோதனையால் குழப்பம்: அடையாளம் தெரியாத சடலத்துக்கு சடங்கு - உறவினர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கோட்டக்குப்பத்தில் ​​உடலை மாற்றி பிரேத பரிசோதனை செய்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் அடையாளம் தெரியாத சடலத்துக்கு சடங்கு செய்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விழுப்​புரம் மாவட்​டம் கோட்டக்​குப்​பம் சின்ன முதலியார் சாவடிக்​குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்தவர் விநாயகம் (60). இவர் நேற்று முன்​தினம் அதி​காலை மீன் பிடிக்க கடலுக்​குள் சென்​றார். அப்​போது படகு கவிழ்ந்து உயி​ரிழந் தார். கோட்டக்​குப்​பம் போலீ​ஸார் விநாயகத்​தின் உடலை பிரேத பரிசோதனைக்காக காலாபட்​டில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் வைத்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று காலை விநாயகம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது சகோதரர் விஜயகுமார் மற்​றும் மீனவக்குப்பம் பஞ்​சா​யத்தார் மற்றும் உறவினர் கள் மருத்​து​வ​மனைக்குச் சென்று பிரேத பரிசோதனைக்கு பின் போலீ​ஸாரின் முன்​னிலை​யில் உடலை கண்ணீர்மல்க வாங்​கிச் சென்றனர்.

விநாயகத்​தின் உடலை வீட்​டுக்கு கொண்டு வந்​த​போது உடலை பார்த்​தவுடன் உறவினர்​கள் கதறி அழுதனர். உடலை குளிர்​சாதனப் பெட்​டி​யில் வைப்​ப​தற்கு முன்​னர் சடங்கு செய்​வதற்​காக முகத்தை திறந்​த​போது அது விநாயகத்​தின் உடல் இல்லை என்​பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த உறவினர்​கள், இது விநாயகத்​தின் உடல் இல்லை என்று கூறினர். ஆனால் உறவினர்​களில் சிலர் பிரேத பரிசோதனை செய்​தால் உடல் இப்​படி தான் இருக்​கும் என்று ஆறு​தல் கூறினர். ஆனால் பெரும்​பாலானோர் ஏற்​றுக் கொள்​ளாத நிலை​யில், அவரது அங்க அடை​யாளங்​களை வைத்து அது விநாயகத்​தின் உடல் இல்லை என்​பதை உறுதி செய்​தனர்.

சுமார் ஒரு மணி நேரத்​துக்கும் மேலாக உடல் வீட்​டில் வைக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், இது குறித்து கோட்​டக்​குப்​பம் போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து சம்பவ இடத்​துக்கு வந்த போலீ​ஸார் பார்த்​த​போது, அந்த உடல் கடந்த ஒரு வாரத்​துக்கு முன்பு புதுக்​குப்​பம் பகு​தி​யில் இறந்த அடை​யாளம் தெரி​யாத நபரின் உடல் என்பதும், மருத்​து​வ​மனை​யில் விநாயகத்​தின் உடல் பிரேத பரிசோதனை செய்​யப்படாமல் இருந்​ததும் தெரிய வந்​தது.

இதையடுத்து விநாயகத்​தின் வீட்​டுக்கு எடுத்து​வரப்​பட்ட அடை​யாளம் தெரி​யாத உடல் மீண்​டும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. மீண்​டும் உறவினர்​களை அழைத்​துச் சென்று விநாயகத்​தின் உடல் பிரேத பரிசோதனை செய்​யும் பணி நடந்​தது. அடை​யாளம் தெரி​யாத நபரின் உடலை நேற்று பிரேத

பரிசோதனை செய்​த​போது அங்கு போலீஸார் இல்​லாத​தால், விநாயகத்​தின் உடலும் அடை​யாளம்‘ தெரி​யாத ஆதர​வற்​றவரின் உடலும் ஒரே மாதிரி​யாக இருந்​த​தால் மாற்றி பிரேத பரிசோதனை செய்​தது தெரியவந்​ததாக கூறப்பட்டது.

உடலை மாற்றி நடந்த பிரேத பரிசோதனையால் குழப்பம்: அடையாளம் தெரியாத சடலத்துக்கு சடங்கு - உறவினர்கள் அதிர்ச்சி
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in