சிபிஐ வழக்கை பயன்படுத்தி விஜய்யை கூட்டணிக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள்: வேல்முருகன் கருத்து

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

Updated on
1 min read

தருமபுரி: சிபிஐ வழக்​கைப் பயன்​படுத்​தி, தவெக தலை​வர் விஜய்யை கூட்​ட​ணிக்கு இழுக்​கப் பார்க்​கிறார்​கள் எனறு தவாக தலை​வர் வேல்​முரு​கன் கூறி​னார்.

தரு​மபுரி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வரும் தேர்​தலில் கூடு​தல் தொகு​தி​கள் ஒதுக்​கு​மாறு நான் நிச்​ச​யம் கேட்​பேன். கடந்த தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் ஒரு இடத்​தில் போட்​டி​யிட்டு வென்ற நான், பல்​வேறு பிரச்​சினை​களுக்​காக தொடர்ந்து ஒற்றை ஆளாகசட்​டப் பேர​வை​யில் குரல் கொடுத்து வரு​கிறேன்.

என்​னுடன் கூடு​தல் உறுப்​பினர்​கள் இருந்​தால், என் கோரிக்​கை​யும் வலுப்​பெறும். என் கட்​சி​யும் வலுப்​பெறும். தமிழகத்​தில்பாஜக காலூன்ற வேண்​டும் என்று விரும்​பு​கிறது. அதற்​காக,மத்​திய அரசு அமைப்​பு​கள், அதி​காரி​களைப் பயன்​படுத்​துகிறார்​கள். அதில் சில வெற்​றி​யும்கண்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் பாஜக வளரவே இல்​லை, எது​வுமே செய்ய முடி​யாது என்று தப்​புக் கணக்கு போடக்​கூ​டாது. பல அரசுகளை கவிழ்த்​து, எம்​எல்​ஏ-க்​களை கும்​பலாக ஈர்த்​தவர்​கள் என்​ப​தால், அவர்​களிடம் தமிழகம் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். காங்​கிரஸ் கட்​சி​யுடன் எனக்கு உறவோ, நெருக்​கமோ கிடை​யாது. எனவே, அவர்​களது நடவடிக்​கைகள் குறித்து நான் கருத்து கூற விரும்​ப​வில்​லை.

சிபிஐ வழக்​கில் சிக்​கி​யுள்​ளவர்​கள் பாஜக கூட்​ட​ணிக்கு வந்து கொண்​டிருக்​கிறார்​கள். அதே​போல, சிபிஐ வழக்​கைப் பயன்​படுத்​தி, தவெக தலை​வர் விஜய்யை கூட்​ட​ணிக்கு இழுக்க அமித் ஷா முயற்​சிக்​கலாம். அது நிறைவேறுமா என்​பதை பொறுத்​திருந்து பார்க்க வேண்​டும். இவ்​வாறு வேல்​முரு​கன்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் </p></div>
“திமுகவை தவிர வேறு யாரும் எதிரிகள் இல்லை” - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in