இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு: பாஜக, இந்து முன்னணி மாநிலத் தலைவர்கள் குற்றச்சாட்டு

நயி​னார் நாகேந்​திரன், காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், ராம.ரவிக்​கு​மார், ரமேஷ், குற்​றால​நாதன்

நயி​னார் நாகேந்​திரன், காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், ராம.ரவிக்​கு​மார், ரமேஷ், குற்​றால​நாதன்

Updated on
1 min read

மதுரை / சென்னை: ​தி​முக அரசு இந்​துக்​களுக்கு விரோத​மாக செயல்​படு​வ​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வராசுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் புகார் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

பாஜக மாநில தலைவர் நயி​னார் நாகேந்​திரன்: திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​வது தொடர்​பாக நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை, தமிழகம் முழு​வதற்​கு​மான வெற்​றி​யாகப் பார்க்​கிறோம். இந்த விவ​காரத்​தில் தமிழக அரசு தேவை​யின்றி தலை​யிடு​கிறது. நீதிப​தி​யின் தீர்ப்பை அரசும், காவல் துறை​யும் ஏற்​பது​தான் நியா​யம். தமிழக அரசு தொடர்ந்து இந்​துக்​களுக்கு எதி​ராகவே செயல்​படு​கிறது.

இந்து முன்​னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்​பிரமணி​யம்: சிறு​பாண்​மை​யினர் வாக்​கு​களுக்​காக திருப்​பரங்​குன்​றம் விவகாரத்தை அரசி​ய​லாக்​கு​கிறார்​கள். திமுக அரசு இந்​துக்​களுக்கு மட்​டும் விரோத​மாக செயல்​பட்டு வரு​கிறது. இதற்​கெல்​லாம் வரும் தேர்​தலில் பதிலடி கிடைக்​கும். 100 ஆண்டு போராட்​டத்​துக்கு தற்​போது வரலாற்று வெற்றி கிடைத்​துள்​ளது.

இந்து தமிழர் கட்​சித் தலை​வர் ராம.ரவிக்​கு​மார் (திருப்​பரங்​குன்​றம் வழக்​கின் மனு​தா​ரர்): திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று நீதி​மன்​றங்​கள் பல வழக்​கு​களில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளன. அதன் அடிப்​படை​யில் நாங்​கள் வழக்கு தொடர்ந்​தோம். இந்த வழக்​கில் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பு முரு​க​னுக்கு கிடைத்த வெற்​றி​யாகும். இந்து சமய அறநிலை​யத் துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் நடக்​கக்​கூடிய அநி​யா​யங்​களுக்கு சவுக்​கடி கிடைத்​திருக்​கிறது. சிறு​பான்​மை​யினருக்கு ஆதர​வாக இருக்​கிறோம் என்று கூறிக்​கொண்​டு, கோடிக்​கணக்​கான இந்​துக்​களின் மனதை தமிழக அரசு புண்​படுத்​தி​விட்​டது.

ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் டி.ஆர்​.ரமேஷ்: திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​வ​தில் ஆட்​சேபனை இல்லை என்று 2005-ம் ஆண்​டிலேயே

வக்பு வாரி​யம் கூறி​விட்​டது. இந்த விவ​காரத்​தில் அரசி​யலை கலக்​கக் கூடாது. ஆனால்,தமிழக தேர்​தலை மனதில்​கொண்​டும், சிறு​பான்​மை​யினருக்கு ஆதர​வாக இருக்​கிறோம் என்​பதை காட்​டு​வதற்​காகக​வும் தீபம் ஏற்​று​வதை தடுத்​து, உயர் நீதி​மன்ற உத்​தரவை அவம​தித்து விட்​டது. வக்பு வாரியமே ஆட்​சேபனை செய்​யாத நிலை​யில், தமிழக அரசு அவசர கதி​யில் மேல்​முறை​யீட்டு மனுவை தாக்​கல் செய்​தது கண்​டனத்​துக்​குரியது.

இந்து முன்​னணி மாநிலச் செய​லா​ளர் கா.குற்​றால​நாதன்: திருப்பரங்குன்றத்தில் இந்து முன்​னணி​யினர் கண்​ணி​யத்​துட​னும், ஒழுக்​கத்​துட​னும் நடந்து கொண்​டாலும், போலீ​ஸார் கலவரத்தை தூண்​டு​வது​போல நடந்​து​கொண்​டனர். இந்த விவ​காரத்​தில், காவல் துறை உயரதி​காரி டேவிட்​சன் தேவாசீர்வாதம் பின்​னணி​யில் இருப்​ப​தால்​தான், காவல் ஆணை​யர் லோக​நாதன் தைரிய​மாக செயல்​படு​கிறார். அவருக்​குப் பின்​னால் திமுக அரசு உள்​ளது.

முகலாயர் ஆட்​சி​யில் இந்​துக்​கள் எந்த அளவுக்கு கொடுமைப்​படுத்​தப்​பட்​டார்​கள் என்பதை வரலாற்​றில் படித்​துள்​ளோம். தற்​போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் ஸ்டா​லினை அவுரங்​கசீப் வடி​வில் பார்க்​கிறேன்​. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்​துக்​கள்​ தி​முக​வுக்​கு பதிலடி கொடுப்​பார்​கள்​.

<div class="paragraphs"><p>நயி​னார் நாகேந்​திரன், காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், ராம.ரவிக்​கு​மார், ரமேஷ், குற்​றால​நாதன் </p></div>
ஐகோர்ட் 2-வது முறையாக உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in