கோவை, நீலகிரியில் பறவை காய்ச்சல் பீதி: எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

நீல​கிரி மாவட்​டம் நாடு​காணி சோதனைச் சாவடி​யில் கேரளா​விலிருந்து வரும் வாக​னங்​களுக்கு கிருமி நாசினி தெளித்த கால்​நடை மருத்​து​வக் குழுவினர்​.

நீல​கிரி மாவட்​டம் நாடு​காணி சோதனைச் சாவடி​யில் கேரளா​விலிருந்து வரும் வாக​னங்​களுக்கு கிருமி நாசினி தெளித்த கால்​நடை மருத்​து​வக் குழுவினர்​.

Updated on
1 min read

கோவை / கூடலூர்: கேரள மாநிலத்​தில் பறவைக் காய்ச்​சல் பரவும் சூழலில், கேரளாவை ஒட்​டி​யுள்ள தமிழக மாவட்​டங்​களில் மருத்​து​வக் கண்​காணிப்​பு, சோதனை​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. கோவை, நீல​கிரி​யில் பறவைக் காய்ச்​சல் பீதி​யால், பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

கேரள மாநிலம் ஆலப்​புழா, கோட்​ட​யம் மாவட்​டங்​களில் பண்​ணை​களில் வளர்க்​கப்​படும் கோழிகள், வாத்​துகள் அதிக எண்​ணிக்​கை​யில் உயி​ரிழந்​தன. அவற்​றின் ரத்த மாதிரி​களைப் பரிசோ​தித்​த​தில் பறவை காய்ச்சல் பரவி​யிருந்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டதுடன், நோயால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் கோழி, காடை, வாத்து இறைச்சி மற்​றும் முட்​டைகள் விற்​பனைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் எதிரொலி​யாக கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் பறவைக் காய்ச்​சல் பீதி ஏற்​பட்​டுள்​ளது.

கேரளா​வுக்கு அரு​கில் உள்ள கோவை மாவட்​டத்​தில் பொள்​ளாச்​சி, மேட்​டுப்​பாளை​யம், சிறு​முகை பகு​தி​களில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கோழிப்​பண்​ணை​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் கிருமி நாசினி தெளித்​தல் உள்​ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்ள பண்ணை உரிமை​யாளர்​கள் அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளனர்.

கால்​நடைத் துறை இணை இயக்​குநர் மகாலிங்​கம் கூறும்​போது, “கோழிப் பண்​ணை​களின் நுழைவு​வா​யில் பகு​தி​களில் பொட்​டாசி​யம் பெர்​மாங்​க​னேட் கரைசல் கலந்த தண்​ணீரை வைக்​க​வும், பண்​ணைக்கு வரும் வாக​னங்​களில் கிருமி நாசினி தெளிக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது.

கோவை​யில் இது​வரை எந்த கோழிக்​கும் பறவைக் காய்ச்​சல் அறிகுறி கண்​டறியப்​பட​வில்​லை. கோழிகளுக்கு ஏதாவது அறிகுறி தென்​பட்​டால், உடனடி​யாக அரு​கில் உள்ள கால்​நடை மருத்​து​வர்​களுக்கு தகவல் கொடுக்​கு​மாறு பண்ணை உரிமை​யாளர்​களுக்கு அறிவுறுத்​தி​யுள்​ளோம்.

தமிழக-கேரள எல்​லைகளான வாளை​யாறு, வேலந்​தாவளம் உட்பட 12 இடங்​களில் உள்ள சோதனைச்​சாவடிகளில் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கேரளா​வில் இருந்து தமிழகத்​துக்​கு வரும் வாக​னங்​கள் மீது கிருமி நாசினி தெளிக்​கப்​படு​கிறது” என்​றார்.

இதே​போல, தமிழக, கேரள மாநிலங்களின் எல்​லை​யில் அமைந்​துள்ள நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள கக்க​னல்​லா, நம்​பி​யார் குன்​னு, தாளூர், சோலாடி, பூல​குன்​னு, நாடு​காணி மற்​றும் பாட்​ட​வயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஒரு கால்​நடை உதவி மருத்​து​வர் தலை​மை​யில், கால்​நடை ஆய்​வாளர் மற்​றும் கால்​நடைப் பராமரிப்பு உதவி​யாளர்​கள் கொண்ட குழு​வினர் பறவைக் காய்ச்​சல் தடுப்பு நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும், கேரளா​வில் இருந்து கோழிகளை நீல​கிரிக்கு கொண்​டுவர தற்​காலிக​மாக தடை விதித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>நீல​கிரி மாவட்​டம் நாடு​காணி சோதனைச் சாவடி​யில் கேரளா​விலிருந்து வரும் வாக​னங்​களுக்கு கிருமி நாசினி தெளித்த கால்​நடை மருத்​து​வக் குழுவினர்​.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in