நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்: சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நேற்று  வேலைநிறுத்தப் போராட்டம்  நடந்தது. இதையொட்டி, சென்னை பிராட்வேயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள். | படம்: எல்.சீனிவாசன் |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இதையொட்டி, சென்னை பிராட்வேயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: ​வாரத்​துக்கு 5 நாட்​கள் மட்​டுமே வேலை​நாட்​களாக அறிவிக்​கக் கோரி, நாடு முழு​வதும் நேற்று வங்கி ஊழியர்கள் ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் வங்கி சேவை​கள் முடங்​கி பொது​மக்​கள் அவதி​யுற்​றனர்.

வாரத்​துக்கு 5 நாட்​கள் மட்​டுமே வேலை​நாட்​களாக அறிவிக்​கக் கோரி, யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் கூட்​டமைப்​பின்கீழ் அதி​காரி​களுக்​கான சங்​கம், ஊழியர்​களுக்​கான சங்​கம் என வங்​கித் துறை​யில் உள்ள அனைத்து 9 சங்​கங்களின் சார்​பில் நாடு தழு​விய ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தம் நேற்று நடைபெற்றது.

இதில் இந்​தி​யா​வில் உள்ள பொதுத்​துறை, தனி​யார் வங்​கி​கள், கிராமப்​புற, கூட்​டுறவு வங்​கி​கள் என ஒட்​டுமொத்​த​மாக 8 லட்​சம் ஊழியர்​கள் பங்​கேற்​றனர். அதன்​படி, சென்​னை​யில் பிராட்வே பிர​காசம் சாலை​யில் உள்ள யூனியன் வங்கி முன்பு அகில இந்​திய வங்கி ஊழியர் சங்​கம், இந்​திய வங்கி ஊழியர் சம்​மேளனம் உள்​ளிட்ட சங்​கங்​களின் சார்​பில் வேலைநிறுத்​தப் போராட்​டம் நடை​பெற்​றது.

இதில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். இதுகுறித்து இந்​திய வங்கி ஊழியர் சம்​மேளன மாநிலத் தலை​வர் சுனில் குமார் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “வங்கி ஊழியர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2-வது மற்​றும் 4-வது சனிக்​கிழமை​கள் மட்​டும் விடு​முறை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

அனைத்து சனிக்​கிழமை​களி​லும் விடு​முறை அளித்​து, வாரத்​துக்கு 5 நாட்​கள் மட்​டும் வேலை என்​பதை அமல்​படுத்த வேண்​டும் என்​பது எங்​களது 10 ஆண்​டு​கால கோரிக்​கை. நிதித்​துறை​யில் உள்ள எல்​ஐசி மற்​றும் ரிசர்வ் வங்​கி​யில் ஏற்​கெனவே 5 நாள் வேலை​முறை அமலில் உள்​ளது. ஆனால், பொதுத்​துறை மற்​றும் இதர வங்கி ஊழியர்​களுக்கு மட்​டும் இது மறுக்​கப்​படு​கிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஊதிய ஒப்​பந்​தம் கையெழுத்​தான​போது, 5 நாள் வேலைத்​திட்​டம் குறித்து 6 மாதங்​களுக்​குள் முடி​வெடுத்து அமல்​படுத்​து​வ​தாக இந்​திய வங்​கி​கள் சங்​கம் (ஐபிஏ) உறு​தி​யளித்​திருந்​தது.

ஆனால், இது​வரை மத்​திய நிதிச்சேவை​கள் துறை​யின் ஒப்​புதல் கிடைக்​க​வில்லை எனக் கூறி காலம் தாழ்த்தி வரு​கின்​றனர். அரசு மற்​றும் ஐபிஏ தரப்​பில் இருந்து சாதக​மான அறி​விப்பு வரா​விட்​டால், மார்ச் மாதத்​தில் கால​வரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்​டத்​தில் ஈடுபட ஆலோ​சிக்​கப்​படும்” என்றார்.

ஏற்​கெனவே கடந்த 24-ம் தேதி (4-வது சனி) மற்​றும் ஞாயிறு விடு​முறையைத் தொடர்ந்து 26-ம் தேதி குடியரசு தினத்​துக்​கும் வங்​கி​கள் திறக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் தொடர்ந்து 4-வது நாளாக வேலைநிறுத்​தம் காரண​மாக பல்​வேறு வங்​கி​களில் ஊழியர்​கள் இல்​லாமல் வங்கி சேவை​கள் முடங்​கின. பண பரிவர்த்​தனை​யும் பாதிக்​கப்​பட்​டது. இதனால் வாடிக்​கை​யாளர்​கள் பெரிதும் அவதி​யுற்​றனர்.

<div class="paragraphs"><p>பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நேற்று  வேலைநிறுத்தப் போராட்டம்  நடந்தது. இதையொட்டி, சென்னை பிராட்வேயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள். | <em>படம்: எல்.சீனிவாசன்</em> |</p></div>
பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in