வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன், கேமராவுக்கு தடை: காவல் துறை அறிவிப்பு

அங்கீகார அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: தேர்​தல் ஆணை​யம், மாவட்​டத் தேர்​தல் அதி​காரி அல்​லது தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யால் முறை​யாக வழங்​கப்​பட்ட, செல்​லுபடி​யாகும் அங்​கீகரிக்​கப்​பட்ட புகைப்பட அடை​யாள அட்டை இல்​லாமல் வாக்கு எண்​ணும் மையத்​தில் யாரும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். செல்​போன், கேமரா மற்​றும் தடை செய்​யப்​பட்ட பொருட்​களை கொண்​டுவர அனு​மதி இல்லை என்று காவல் துறை தெரி​வித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்​து, வாக்​கு​கள் பதி​வான மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும், தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணிக்கை மையங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டன. இந்த மையங்​களில் 3 அடுக்கு போலீஸ் பாது​காப்​புடன் 18 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், 62 மையங்​களி​லும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்​ணிக்கை தொடங்​கு​கிறது. வாக்கு எண்​ணும் மையங்​களில் கடைபிடிக்க வேண்​டிய வழி​முறை​கள் குறித்து காவல் துறை வெளி​யிட்​டுள்ள அறி​வுறுத்​தல்​கள்:

# வாக்கு எண்​ணும் மையங்​களுக்​குள் அங்​கீகரிக்​கப்​ப​டாத நபர்​கள் நுழைவதை தடுக்க, 3 அடுக்கு பாது​காப்பு வளை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மையங்​களுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​பட்ட நபர்​களின் அடை​யாளம், அங்​கீ​காரத்தை சரி​பார்க்க வெளிப்​புற வளை​யத்​தில் போது​மான காவலர்​கள் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

# தேர்​தல் ஆணை​யம், மாவட்​டத் தேர்​தல் அதி​காரி அல்​லது தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யால் முறை​யாக வழங்​கப்​பட்ட,செல்​லுபடி​யாகும் அங்​கீகரிக்​கப்​பட்ட புகைப்பட அடை​யாள அட்டை இல்​லாமல் யாரும் மையத்​துக்​குள் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். நுழைவை ஒழுங்​குபடுத்​த​வும், கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் நுழைவு​வாயி​லில் உயர் அதி​காரி​கள் பணி​யில் ஈடு​படு​கின்​றனர்.

# தேர்​தல் ஆணை​யத்​தால் வழங்​கப்​பட்ட செல்​லுபடி​யாகும் அங்​கீ​கார அட்​டைகளைக் கொண்ட ஊடகத்​தினர் மட்​டும் கையடக்க கேம​ரா, வீடியோ கேம​ராக்​களு​டன் மையங்​களில் குறிப்​பிட்ட எல்லை வரை அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். மற்​றவர்​களுக்கு அனு​மதி இல்​லை.

# தேர்​தல் பார்​வை​யாளரைத் தவிர வேறு யாரும் வாக்கு எண்​ணும் கூடத்​துக்​குள் செல்​போன் கொண்டு செல்ல அனு​மதி இல்​லை.

# கூர்​மை​யான பொருள், தீக்​குச்​சி, கம்​பி, லைட்​டர், வெடிபொருள், எளி​தில் தீப்​பற்​றக்​கூடிய​வை, தடைசெய்​யப்​பட்ட பொருட்​களான மண்​ணெண்​ணெய், செல்​போன், கேம​ராக்​கள் போன்ற மின்​னணு சாதனங்​கள் போன்​றவற்றை மையத்​துக்​குள் யாரும் கொண்​டு​வரக் கூடாது.

# மையத்​தில் இருந்து தனி நபர்​கள் உள் மற்​றும் வெளிப் பாது​காப்பு வளை​யத்​துக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் குடிநீர் அருந்த வெளியே வரலாம். ஆனால், நுழைவு​வாயி​லில் முழு​மை​யான சோதனைக்​குப் பிறகே மீண்​டும் உள்ளே அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

# பலமுறை நுழைவதற்​கான அனு​ம​திச் சீட்டு இல்​லாமல் வெளிப் பாது​காப்பு வளை​யத்​தைத் தாண்டி வெளியே செல்​லும் யாரும் மீண்​டும் உள்ளே நுழைய அனு​மதி இல்​லை. முகவர்​கள் அந்​தப் பகு​தி​யை​விட்டு வெளி​யேறி​னால், மீண்​டும் உள்ளே நுழைய முடி​யாது.

# போதை​யில் இருக்​கும் யாரும் வாக்கு எண்​ணும் மைய வளாகத்​துக்​குள் அனு​ம​திக்​கப்​பட​ மாட்​டார்​கள்.இவ்​வாறு காவல் துறை தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடக்கம்; 5 டிகிரி வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in