போகி பண்டிகையில் பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

போகி பண்டிகை | கோப்புப் படம்

போகி பண்டிகை | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ​போகி பண்​டிகையன்று பழைய பொருட்​களை எரிப்​பதை பொது​மக்​கள் தவிர்க்க வேண்​டும் என தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாடு வாரி​யம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக வாரி​ய தலை​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நம் முன்​னோர்​கள் இயற்​கை​யான தேவையற்ற பொருட்​களைஎரித்து போகி பண்​டிகை​யைக் கொண்​டாடிய​தால் சுற்​றுச்​சூழல்பாதிக்​கப்​ப​டா​மல் இருந்​தது.

ஆனால் தற்​கால சூழலில் பிளாஸ்​டிக் மற்​றும் செயற்கை இழைத் துணி​கள், ரப்​பர், டயர் போன்​றவற்றை எரிப்​ப​தால் ஏற்​படும் புகைமண்​டலம், வாகன ஓட்​டிகளுக்கு விபத்​துகளை ஏற்​படுத்​து​வதுடன், பொது​மக்​களுக்கு மூச்​சுத்திணறல், கண் எரிச்​சல் உள்​ளிட்ட உடல்​நலப் பாதிப்​பு​களை​யும் உண்​டாக்​கு​கிறது. இத்​தகைய செயல்​கள் பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு இல்​லாமை​யால் ஏற்​பட்டு வந்​தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்​டு​களில் மேற்​கொள்​ளப்​பட்ட விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் காரண​மாக இத்​தகைய பொருட்​கள் எரிக்​கப்​படு​வது பெரு​மளவு குறைந்​துள்​ளது. இந்த ஆண்​டும் விழிப்​புணர்வு பிரச்​சா​ரங்​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன.

மேலும் சென்​னை​யின் 15 முக்​கிய இடங்​களில் காற்​றின் தரத்தை 24 மணி நேர​மும் கண்​காணிக்​க​வும், அதன் முடிவு​களை வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிட​வும் உரிய ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. எனவே பிளாஸ்​டிக், டயர், ட்யூப் போன்​றவற்றை எரிக்​காமல் சுற்​றுச்​சூழலைப் பாது​காக்​கும் வகை​யில் போகிப் பண்​டிகை​யைக் கொண்​டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>போகி பண்டிகை | கோப்புப் படம்</p></div>
திமுக அரசின் ஊழல்கள் வெளிப்படுத்தப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in