இணையத்தில் சைபர் குற்றங்களை நீக்கிய மன்னார்குடி இளைஞருக்கு அசாம் காவல் துறை பாராட்டு

பிரகதீஷ்

பிரகதீஷ்

Updated on
2 min read

திருவாரூர்: இணை​யத்​தில் அத்​து​மீறி பரவிய பெண்​கள் தொடர்​பான ஆபாச வீடியோ புகைப்​படங்​கள் மற்றும் அவதூறு போன்ற சைபர் குற்​றங்​களை கண்​டறிந்து அவற்றை நீக்​கிய தற்​காக மன்​னார்​குடியைச் சேர்ந்த மென்​பொறி​யாளர் நடத்திவரும் அமைப்​புக்கு அசாம் மாநில காவல் துறை பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடியைச் சேர்ந்த குரு​மூர்த்​தி, செல்வி தம்​ப​தி​யரின் மகன் பிரகதீஷ். மென்​பொறி​யாள​ரான இவர் பெங்​களூருவை தலைமை இடமாகக் கொண்டு ஷெட்​பீக் (Zetpeak ) என்ற சாப்ட்​வேர் நிறு​வனம் நடத்தி வரு​கிறார்.

இதன் ஒருபகு​தி​யாக சைபர் க்ரைம் தடுப்பு மற்​றும் பதிலளிப்பு முகமை (Cyber Crisis Response Agency ) என்ற அமைப்பை நிறு​வி, இணை​யத்​தில் அத்​து​மீறி பரவும் பெண்​கள், குழந்​தைகள் தொடர்​பான ஆபாச வீடியோக்​கள், புகைப்​படங்​கள் மற்றும் தனிமனித அவதூறுகள் போன்ற சைபர் குற்​றங்​களை கண்​டறிந்​து, அவற்றை அகற்​றும் சேவையை செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், அசாம் மாநிலத்​தில் காவல் துறை உதவி கோரியதன் அடிப்​படை​யில், இணை​யத்​தில் அத்​து​மீறி பரவிய, 200-க்​கும் மேற்​பட்ட உள்​ளடக்​கங்​களை பிரகதீஷ் மற்​றும் அவரது குழு​வினர் இணைந்து அகற்​றி​யுள்​ளனர். இதையடுத்​து, பிரகதீஷ் மற்றும் குழு​வினரை அம்​மாநில சைபர் க்ரைம் போலீஸ் எஸ்பி சி.ஆர்​.சிங் பாராட்டி கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

அந்​தக் கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இணை​யத்​தில் அத்​து​ மீறி பரவிய 200-க்​கும் மேற்​பட்ட உள்​ளடக்​கங்​களை அகற்​றி​யுள்ள உங்​களது குறிப்​பிடத்​தக்க சாதனையை நாங்​கள் அங்​கீகரித்து பாராட்​டு​கிறோம். உங்​களது நடவடிக்​கைகள், எண்​ணற்ற பெண்​களின் கண்​ணி​யம், தனி​யுரிமை மற்​றும் பாது​காப்பை காப்​ப​தில் முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளன. மேலும், சமூகத்​தில் ஏற்​படக்​கூடிய தொடர்ச்​சி​யான பாதிப்​பு​களை​யும் தடுக்க உதவி​யுள்​ளன.

இணை​யக் குற்​றங்​களும், ஆன்​லைன் சுரண்​டல்​களும் வேக​மாக அதி​கரித்து வரும் இக்​கால​கட்​டத்​தில் உங்​கள் செயல்பா​டானது, தைரி​யம், பொறுப்​புணர்வு மற்​றும் மனித நே​யத்​தின் சிறந்த முன்​னு​தா​ரணம் ஆகும். பெண்​களுக்​கும், குழந்​தைகளுக்​கும் அவர்​களது உரிமையை வலுப்​படுத்​தி, மரி​யாதை​யான டிஜிட்​டல் சூழலை உரு​வாக்​கும் எங்​களது முயற்​சிக்கு தாங்​கள் வழங்கி வரும் ஆதரவை அசாம் காவல்​துறை பெரிதும் மதிக்​கிறது.

இந்த பணி​யில் நீங்​கள் தொடர்ந்து வெற்றி பெற எங்​களது வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம். உங்​களுக்கு எங்​களது தொடர்ச்​சி​யான ஆதரவு எப்​போதும் உண்​டு. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக பிரகதீஷ் கூறும்​போது, டிஜிட்​டல் குற்​றங்​களை பொருத்​தவரை விரை​வாக செயல்​பட்​டால்​தான் குற்​றத்தை முற்​றி​லும் தடுப்​பதுடன், இணை​யத்​திலிருந்து அகற்றி பாதிப்​பு​களை குறைத்​து, விரை​வாக தீர்வு காண​முடி​யும். அந்​தப் பணி​யை​தான் செய்​கிறோம் என்​றார்.

மன்​னார்​குடி​யில் தனி​யார் பள்​ளி​யில் 2020-ம் ஆண்​டில் பிரகதீஷ் 12-ம் வகுப்பு படிக்​கும்​போதே, இணைய வழி​யில் சைபர் குற்​றங்​கள் தொடர்​பாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி நடத்​தி​னார். இளம்​வய​தில் மென்பொருள் நிறு​வனம் நடத்திவரு​வதை பாராட்​டி, லிம்கா புக் ஆப் ரெக்​கார்ட் அமைப்பு சான்​றிதழை​யும் பெற்​றிருந்​தார். இதை அறிந்த அப்​போதைய திரு​வாரூர் எஸ்​.பி. துரை ஏற்​பாட்​டின்​பேரில், சைபர் குற்றங்​களை கையாள்​வது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் துறையினருக்கு பிரகதீஷ் பயிற்​சி அளித்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>பிரகதீஷ்</p></div>
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: 77 பேர் உயிரிழப்பு, கட்டிடங்கள் இடிந்து சேதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in