இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில், மலர்வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில், மலர்வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெனரல் பிபின் ராவத் 4-ம் ஆண்டு நினைவு தினம்: ராணுவ அதிகாரிகள் அஞ்சலி

Published on

குன்னூர்: நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் வெலிங்​டனில் முப்​படை அதி​காரி​கள் பயிற்சி கல்​லூரிக்கு வரு​வதற்​காக, கடந்த 2021-ம் ஆண்டு டிச.8-ம் தேதி அப்​போதைய முப்​படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்​படை தளத்​துக்கு வந்​தார்.

அங்​கிருந்து குன்​னூர் வெலிங்​டன் ராணுவ பயிற்சி மையத்​துக்கு எம்​.ஐ. ரக ஹெலி​காப்​டரில் வந்​த​போது நஞ்​சப்பா சத்​திரம் கிராமம் அருகே நடந்த விபத்​தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட14 பேர் உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்​பவம் நடை​பெற்று 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்​டி, விபத்து ஏற்​பட்ட பகு​தி​யில் உள்ள நினை​வுத் தூணில் ராணுவப் பயிற்சி கல்​லூரி கமாண்​டன்ட் லெப்​டினன்ட் ஜெனரல் மனீஷ் ஆரி, மேஜர் ஜெனரல் யாதவ் உள்​ளிட்ட அதி​காரி​கள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ இசை​யுடன் ராணுவ வீரர்​கள் மரி​யாதை செலுத்​தியபின் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்​தப்​பட்​டது.

<div class="paragraphs"><p>இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில், மலர்வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.</p></div>
​​தவெக ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்தவர் உட்பட 5 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in