அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானதை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அ​தி​முக பொதுச் செய​லா​ள​ர் பழனி​சாமி

அ​தி​முக பொதுச் செய​லா​ள​ர் பழனி​சாமி

Updated on
1 min read

புதுடெல்லி: அ​தி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்​வானதை எதிர்த்து தாக்​கல் செய்யப்பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்​தும், பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​தது செல்​லாது என்று அறிவிக்க கோரி​யும், திண்​டுக்​கல் மாவட்​டத்​தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி பழனி​சாமி மனுவை, உரிமை​யியல் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் பழனி​சாமி மேல்​முறை​யீடு செய்​தார். இதில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை நிராகரித்து கடந்த செப்​.4-ம் தேதி உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து சூரியமூர்த்தி சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்​மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

மனு​தா​ரர் வழக்​கறிஞர் மீனாட்சி அரோரா ஆஜரானார். பின்னர் பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்​வானதை எதிர்த்த சூரியமூர்த்தியின் மேல்​ முறை​யீட்​டு மனுவை நீதிப​தி​கள்​ தள்​ளு​படி செய்​தனர்​.

<div class="paragraphs"><p>அ​தி​முக பொதுச் செய​லா​ள​ர் பழனி​சாமி</p></div>
ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 2,000 பேர் சென்னையில் 4-வது நாளாக போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in