

சென்னை: தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 முன்னணி செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்தது.
அதில், ‘தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே 3 சேனல்களை தற்காலிகமாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட 3 ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
ஆனால், தவெக அரசின் அவலத்தை வெளிப் படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும் செட்டாப் பாக்ஸில் எப்படி தொழில்நுட்ப பிரச்சினைகள் வரும்.
பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.