‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 2021 ஆக. 5-ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் 13,225 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கப்படுகிறது.

தேர்தல் பணிகளால் கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நிலுவை ஊதியம் ரூ.5.01 கோடியை அரசு தற்போது விடுவித்துள்ளது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
சிங்கப்பெண் படையினருக்கு துப்பாக்கி: ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in