

சென்னை: தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 2021 ஆக. 5-ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில் 13,225 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கப்படுகிறது.
தேர்தல் பணிகளால் கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நிலுவை ஊதியம் ரூ.5.01 கோடியை அரசு தற்போது விடுவித்துள்ளது.