அரசு ஊழியர்கள் ஏமாந்து விடாதீர்கள்: அன்புமணி எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் ஏமாந்து விடாதீர்கள்: அன்புமணி எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: ‘ஓய்​வூ​தி​யத் திட்​டம் செயல்​பாட்​டுக்கு வரப்​போவ​தில்​லை. எனவே திமுக அரசை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்​கள் ஏமாந்து விடாதீர்​கள்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக அரசு அறி​வித்​திருக்​கும் தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் சவலைக் குழந்​தை​யாக இருக்​கிறது.

திமுக அரசை நம்​பிய அரசு ஊழியர்கள், தாங்​கள் ஏமாற்றப்​பட்டு விட்​ட​தாக அரசு ஊழியர்கள் சங்​கங்​கள் விமர்​சிக்​கத் தொடங்​கி​யுள்​ளன. திமுக அரசு அறி​முகம் செய்​துள்ள ஓய்​வூ​தி​யத் திட்​டம் குறித்து நான் என்​னென்ன குற்​றச்​சாட்​டு​களை​யெல்​லாம் முன்​வைத்​தேனோ, அவை அனைத்​தும் உண்மை என்​பதை அரசு ஊழியர்கள் இப்​போது உணரத் தொடங்​கி​யுள்​ளனர்.

ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை திமுக அரசு அறி​வித்து விட்​டாலும்​கூட, அதற்​கான அரசாணை இன்​னும் பிறப்​பிக்​கப்​பட​வில்​லை. எனவே, தேர்​தலுக்கு முன்​பாக இந்​தத் திட்​டம் நடை​முறைக்கு வரப்​போவ​தில்​லை.

இந்த தேர்​தலில் அரசு ஊழியர்​களின் வாக்​கு​களை ஏமாற்றி வாங்கி வெற்றி பெற்​று​விட வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் இந்த திட்​டத்தை திமுக அறி​வித்​துள்​ளது. ஒரு​வேளை திமுக மீண்​டும் வெற்றி பெற்று ஆட்​சிக்கு வந்​தா​லும்​கூட ஓய்​வூ​திய திட்​டத்தை செயல்​படுத்த முன்​வ​ராது என்​பது​தான் உண்​மை.

எனவே, எவரும் திமுக அரசை நம்பி ஏமாந்து விடாதீர்​கள். உங்​களை ஏமாற்​றிய திமுக அரசை வரும் தேர்​தலில் வீழ்த்​துங்​கள். அதன்​பிறகு அமை​யும் ஆட்​சி​யில் அரசு ஊழியர்கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​படு​வதை பாமக உறுதி செய்​யும் என்று உறு​தி​யளிக்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அரசு ஊழியர்கள் ஏமாந்து விடாதீர்கள்: அன்புமணி எச்சரிக்கை
சென்னை | கைதிகள் சென்ற வாகனத்துக்குள் கஞ்சா பொட்டலம் வீசிய 2 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in