சென்னை | கைதிகள் சென்ற வாகனத்துக்குள் கஞ்சா பொட்டலம் வீசிய 2 பேர் கைது

சென்னை | கைதிகள் சென்ற வாகனத்துக்குள் கஞ்சா பொட்டலம் வீசிய 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: கை​தி​களை ஏற்​றிச் சென்ற போலீஸ் வாக​னத்​துக்​குள் கஞ்சா பொட்டலம் வீசிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். புழல் சிறையி​லிருந்து 15 கைதி​களை சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த, போலீ​ஸார் நேற்று முன்​தினம் வேனில் அழைத்து வந்​தனர்.

நீதி​மன்ற நடவடிக்​கைகள் முடிந்​து, இரவு 7.30 மணிக்கு புழல் சிறை நோக்கி மீண்​டும் புறப்​பட்​டனர். கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளிகை அரு​கில் செல்​லும்​போது, இருசக்கர வாக​னத்​தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் கஞ்சா பொட்​டலத்தை வாக​னத்​துக்​குள் வீசினர்.

அதில் போலீ​ஸார் இருந்​த​தால் 2 பேரை​யும் பிடித்​து, கிண்டி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். விசா​ரணை​யில், பிடிபட்​ட​வர்​கள் ராயப்​பேட்டை சேர்ந்த ஜோசப் (28), விஜய் (27) என்​பது தெரிய​வந்​தது.

இவர்​கள் இரு​வர் மீதும், அடி தடி, வழிப்​பறி வழக்​கு​கள் உள்​ளன. ஏற்​கெனவே சிறை​யில் இருந்​த​போது, சூளைமேடு பகு​தியை சேர்ந்த தினேஷ்கு​மார் என்​பவருடன் நட்பு ஏற்​பட்​டுள்​ளது.

அவருக்கு கஞ்சா வழங்க முயன்று வேனில் பொட்டலம் வீசி​ய​தாக அவர்​கள் போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளனர். இதையடுத்​து, இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

சென்னை | கைதிகள் சென்ற வாகனத்துக்குள் கஞ்சா பொட்டலம் வீசிய 2 பேர் கைது
ஆவின் மாட்டுத்தீவன ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in