தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஊழல் செய்யவே மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஊழல் செய்யவே மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் 2024-25-ம் ஆண்​டில் வீடு​களுக்​கும், வணிக நிறு​வனங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்ள மின்​சா​ரத்​தில் வெறும் 16 சதவீதம் மட்​டுமே மின்​சார வாரி​யத்​தால் சொந்​த​மாக உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. 80.66 சதவீத மின்சாரம் வெளி​யாரிட​மிருந்து வாங்​கப்​படு​கிறது.

திமுக ஆட்​சிக்கு வந்து 5 ஆண்​டு​கள் நிறைவடைய​வுள்ள நிலை​யில், இன்​று​வரை ஒரு மெகா​வாட் அளவுக்​குக்​கூட புதிய மின் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட​வில்​லை.

ரூ.10,158 கோடி செல​வில் கட்​டமைக்​கப்​பட்ட 800 மெகா​வாட் திறன் கொண்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்​நிலை​யம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்டு 20 மாதங்​கள் ஆகும் நிலை​யில், இன்று வரை அதில் வணி​கரீ​தியி​லான மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட​வில்​லை.

தமிழகத்​தில் மின்​கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டதன் மூலம் மின்​வாரி​யத்​துக்கு இது​வரை ரூ.1 லட்​சத்து 28,363 கோடி கூடு​தலாக வரு​மானம் கிடைத்​திருக்​கிறது. ஆனால், மின்​வாரி​யம் இன்​னும் நஷ்டத்​தில் இயங்​கிக் கொண்​டிருப்​ப​தற்கு காரணம் மின்​சார கொள்​முதல் ஊழல்​கள்​தான்.

தனி​யாரிடம் மின்சாரம் வாங்கி பல்​லா​யிரம் கோடி ஊழல் செய்​வதற்​காகவே மின் திட்​டங்​களை செயல்​படுத்த திமுக ஆட்​சி​யாளர்​கள் மறுக்​கிறார்​கள். தேர்​தலில் அவர்​களுக்கு மக்​கள் பாடத்​தைப் புகட்​டு​வார்​கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஊழல் செய்யவே மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் மீது சாத்தியமான நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in