ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் மீது சாத்தியமான நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி

தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் | கோப்புப் படம் |

தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் | கோப்புப் படம் |

Updated on
1 min read

சென்னை: ரயில்வே தொடர்​பான கோரிக்​கைகள் முறையாகப் பரிசீலிக்​கப்​பட்​டு, சாத்​தி​ய​மான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​படும் என்​று, தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் உறுதி அளித்​தார்.

தெற்கு ரயில்வே சார்​பில், 129-வது மண்டல ரயில்வே பயனர்​கள் ஆலோ​சனைக் குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​துக்​கு, தெற்கு ரயில்வே பொது மேலா​ள​ரும், குழு​வின் தலை​வரு​மான ஆர்​.என். சிங் தலைமை வகித்​தார்.

இக்​கூட்​டத்​தில், நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் சு. வெங்​கடேசன், தமிழச்சி தங்​க​பாண்​டியன், சட்​டப்​பேரவை உறுப்​பினர் எஸ். ரமேஷ், மாநில அரசு பிர​தி​நி​தி​கள், தொழில் மற்​றும் வர்த்தக சபை உறுப்​பினர்​கள், பதிவு செய்​யப்​பட்ட பயணி​கள்சங்​கங்​கள், பொதுத்​துறை நிறு​வனங்​கள் மற்​றும் இந்​திய மாற்​றுத் திற​னாளி​கள் அறக்​கட்​டளை உறுப்​பினர்​கள், நுகர்​வோர் பாது​காப்பு கவுன்​சில் மற்​றும் ரயில்வே அமைச்​ச​ரால் சிறப்​புப் பிரி​வின் கீழ் நியமிக்​கப்​பட்ட உறுப்​பினர்​கள், தெற்கு ரயில்​வே​யின், 6 கோட்​டங்​களில் இருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட கோட்ட ரயில்வே பயனர்​கள் ஆலோ​சனைக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் தெற்கு ரயில்​வே​யின் முதன்​மைத் துறைத் தலை​வர்​கள் ஆகியோர் கலந்​துக் கொண்​டனர்.

தெற்கு ரயில்வே மேற்​கொண்டு வரும் மேம்​பாட்​டுப் பணி​களுக்கு உறுப்​பினர்​கள் பாராட்டு தெரி​வித்​தனர். தங்​கள் பகுதி சார்ந்த ரயில்வே தொடர்​பான கோரிக்​கைகளை உறுப்​பினர்​கள் முன் வைத்​தனர். ரயில்வே உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, புதிய ரயில் சேவை​களை அறி​முகப்​படுத்​துதல், ரயில்​களை நீட்​டிப்பு செய்​தல் மற்​றும் பயணி​களுக்​கான வசதி​களை மேம்​படுத்​துதல் குறித்த ஆலோ​சனை​களை வழங்​கினர்.

கூட்​டத்​தில், பொது மேலா​ளர் ஆர்​.என். சிங் பேசுகை​யில், “தெற்கு ரயில்வே எப்​போதும் பயணி​களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் மண்​டல​மாகச் செயல்​படு​கிறது.

செயல்​பாட்​டுத் திறனை அதி​கரிக்​க​வும், பயணி​களின் சேவை​களை மேம்​படுத்​தவும் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. உறுப்​பினர்​கள் எழுப்​பிய கோரிக்​கைகள் முறை​யாகப் பரிசீலிக்​கப்​பட்​டு, சாத்​தி​ய​மான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​படும்” என்​றார். தெற்கு ரயில்வே துணை பொது மேலா​ளர் அஜய் கவுஷிக் நன்றி தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் | கோப்புப் படம் |</p></div>
சாலை விதிமீறலை துல்லியமாக அறிய போக்குவரத்து போலீஸாரின் சட்டை பட்டனில் பொருத்தப்படும் நவீன கேமரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in