திருவள்ளூர் - பெரியபாளையம் வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

27 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை
மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள்.

மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள்.

Updated on
2 min read

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அருகே உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயு கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 2 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த நிலை​யில், சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் 6 பெண்​கள் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை 8 ஆக உயர்ந்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் உள்ள ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற நிறு​வனம், இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்து வரு​கிறது. இங்கு 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் பணி​யாற்றி வந்​தனர்.

கடந்த 21-ம் தேதி காலை 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அமோனியா வாயு தொட்​டி​யில் இருந்து குளிர்​சாதனப் பிரிவுக்கு செல்​லும் குழா​யின் வால்வு பகு​தி பெரும் சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாயு கசிவு ஏற்​பட்​டது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை​யின் முதல்​தளம் முழு​வதும் அமோனியா வாயு பரவியது.

இதனால், பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் மற்​றும் அரு​கில் உள்ள தங்​குமிடங்​களில் தூங்​கிக் கொண்​டிருந்த பெண் தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட 77 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல், வாய் மற்​றும் மூக்​கில் ரத்​தக்​கசிவு போன்ற பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன. வாயுவின் நச்சுத்தன்மை காரணமாக பலர் குளியலறை பகுதிக்கு சென்று மயங்கி கிடந்தனர். இதனால் பதற்​ற​மான சூழல் உரு​வானது.

பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை அதி​காரி​கள் மற்​றும் நிறுவன ஊழியர்​கள் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பிற வாக​னங்​கள் மூலம் மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகியோர் உயி​ரிழந்​தனர். மற்​றவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி ஷிபானி (22), திலோமினி (20), கீதா ஜுங்கா (24), பர்​பாவதி ஜுங்கா (19), ஷம்​படி ஜுங்கா (23), பூர்​ணிமா ஜுங்கா (19) ஆகிய 6 பெண்கள் நேற்று உயி​ரிழந்​தனர். இதனால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 8 ஆக அதி​கரித்​துள்​ளது. இவர்​கள் 8 பேரும் ஒடி​சாவைச் சேர்ந்​த பெண்​கள்.

தற்​போது 67-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர்​களில் சிலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​களை அமைச்​சர் ராஜீவ், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், விசிக தலை​வர் திரு​மாவளவன், காங்​கிரஸ் எம்​.பி. சசி​காந்த் செந்​தில் மற்​றும் ஒடிசா மாநில தொழிலா​ளர் நலத் துறை அதி​காரி​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். தொழிற்​சாலை​யில் இருந்த சுமார் 1.5 டன் அமோனியா வாயுவை பாது​காப்​பாக அகற்​றும் பணி​களும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

<div class="paragraphs"><p>மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள்.</p></div>
மின்துறை குறித்து 2 நாளில் வெள்ளை அறிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in