நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்: உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தல்

மடப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார் மாலதி,  வழக்கறிஞர் கணேஷ்குமார் உள்ளிட்டோர்.

மடப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார் மாலதி, வழக்கறிஞர் கணேஷ்குமார் உள்ளிட்டோர்.

Updated on
2 min read

திருப்புவனம்: என் மகன் மீது பொய்​யான திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடி​யாகக் கைது செய்ய வேண்​டும் என்று காவலர்​கள் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் காவலாளி அஜித்​கு​மாரின் தாயார் மாலதி கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயிலுக்கு 2025 ஜூன் 27-ல் மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா சுவாமி கும்​பிட வந்​தார். அப்​போது தனது தங்​கச் சங்​கிலி திருடு போன​தாகப் புகார் கொடுத்​தார்.

இது தொடர்​பாக, கோயில் காவலா​ளி​யாகப் பணி​யாற்​றிய அஜித்​கு​மார் என்​பவரை தனிப்​படைக் காவலர்​கள் விசா​ரித்​தனர். விசா​ரணை​யின்​போது காவலர்​கள் தாக்​கிய​தில் பலத்த காயமடைந்த அஜித்​கு​மார் ஜூன் 28-ம் தேதி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

டிஎஸ்​பி, காவல் ஆய்​வாளர், உதவி ஆய்​வாளர் உள்​ளிட்​டோர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கை தற்​போது சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், அஜித்​கு​மார் மீது தெரிவிக்​கப்​பட்ட நகை திருட்டு தொடர்​பாக விசா​ரிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது. திடீர் திருப்​ப​மாக, நிகிதா அளித்த திருட்டு புகாரே பொய்​யானது என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் சிபிஐ தெரி​வித்​தது.

இது தொடர்​பாக மடப்​புரத்​தில் அஜித்​கு​மாரின் தாயார் மாலதி செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நிகிதா நகை திருட்டை விசா​ரிக்க போலீ​ஸார் எனது 2 மகன்​களை​யும் அழைத்​துச் சென்​றனர். நகையை எடுத்​திருந்​தால் சிறை​யில் அடைப்​பார்​கள். இல்​லை​யேல் விட்​டு​விடு​வார்​கள் என்று கரு​தினேன்.

ஆனால், கொடூர​மாக அடித்து எனது மகனை கொன்​றனர். எனது மகன் பயங்​கர​வா​தி​யா? அவரைத் தாக்​கிய​வர்​கள் அரக்​கர்​களாக செயல்​பட்​டுள்​ளனர். அவருக்கு உணவு​கூட கொடுக்​காமல் கடுமை​யாகத் தாக்​கி​யுள்​ளனர்.

எனது மகன் நகை திருடியதை யார் பார்த்​தது? நாங்​கள் கஷ்டப்​பட்​டாலும், எனது பிள்​ளை​களைத் தவறானவர்​களாக வளர்க்​க​வில்​லை. எனது மகன் திருடி​யிருக்க மாட்​டான் என நான் நம்​பிக்​கை​யாக இருந்​தேன். ஆனால், அது உலகத்​துக்​குத் தெரிய வேண்​டும் என்று காத்​திருந்​தேன். தற்​போது​தான் விசா​ரணை​யில் எனது மகன் திருட​வில்லை என்று தகவல் வந்​துள்​ளது.

யாரோ 5 பேர் கூறித்​தான் எனது மகனை அடித்​துக் கொன்​றுள்​ளனர். அந்த 5 பேர் யார் என்​பதை விசா​ரிக்க வேண்​டும். கைதான காவலர்​கள் அனை​வரை​யும் வெளி​யே​விடக் கூடாது. மகன் மீது தவறாக திருட்டு புகார் கொடுத்த நிகி​தாவை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும். அவர் ஏன் பொய் புகார் கொடுத்​தார் என்​பதை விசா​ரிக்க வேண்​டும்.

அஜித்​கு​மாரை தாக்​கச் சொன்​னது யார்? பெரிய இடத்​திலிருந்து உத்​தரவு வந்​த​தாகச் சொன்​னார்​கள். யார் அந்த ‘பெரிய இடம்’ என்​ப​தை​யும் விசா​ரிக்க வேண்​டும். இதில் தொடர்​புடைய மற்​றவர்​களை​யும் கைது செய்ய வேண்​டும். சிபிஐ விசா​ரணை​யில் எங்​களுக்கு நம்​பிக்கை இருக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அஜித்​கு​மாரின் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் கூறிய​தாவது: அஜித்​கு​மார் குடும்​பத்​தினர் தற்​போது​தான் நிம்​மதி அடைந்​துள்​ளனர். நிகிதா திட்​ட​மிட்டே பொய் புகார் கொடுத்​துள்​ளார். காவல் நிலை​யத்​தில் ஆய்​வாளர், உதவி ஆய்​வாளர் இருந்​த​போது, டிஎஸ்பி தனிப்​படையை விசா​ரிக்​கச் சொன்​னது ஏன்? டிஎஸ்​பிக்கு அழுத்​தம் கொடுத்​தவர் யார் என்​ப​தை​யும் விசா​ரிக்க வேண்​டும்.

நிகிதா மற்​றும் சம்​பந்​தப்​பட்ட உயர​தி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். போலீ​ஸார் தாக்​கிய​தில் காயமடைந்த நவீன்​கு​மார், பிர​வீன்​கு​மார், அருண், வினோத் ஆகியோ​ருக்கு உடனடி​யாக நிவாரணம் வழங்க வேண்​டும்.

அஜித்​கு​மார், பிர​வீன்​கு​மார், அழகுபொன்னு மற்​றும் காவலர்​களின் செல்​போனில் உள்ள ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு வழக்​கறிஞர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>மடப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார் மாலதி,  வழக்கறிஞர் கணேஷ்குமார் உள்ளிட்டோர்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in