தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவையில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவையில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

வாக்களித்த பின்னர் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னைக்கு வரத் தொடங்கினர். பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானங்களில் சென்னை செல்வதற்கு திட்டமிட்டனர்.

நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஓரிரு விமானங்களில் மட்டுமே, சில டிக்கெட்டுகள் இருந்தன. அந்த டிக்கெட் கட்டணம் பலமடங்கு அதிகரித்திருந்தது.

தூத்துக்குடி - சென்னைக்கு வழக்கமாக ரூ.5,354 இருந்த கட்டணம் நேற்று முன்தினம் இரவுமுதல் நேற்று காலை வரை ரூ.17,089 வரையும், மதுரை - சென்னைக்கு ரூ.5099 ஆக இருந்த கட்டணம் ரூ.32,508 வரையும், திருச்சி - சென்னைக்கு ரூ.4,551 ஆக இருந்த கட்டணம் ரூ.14,310 வரையும், கோவை - சென்னைக்கு ரூ.4,634 ஆக இருந்த கட்டணம் ரூ.11,149 வரையும் உயர்ந்திருந்தன.

விமான டிக்கெட் கட்டண உயர்வு, தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவையில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்கறிஞர்கள் முடிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in