

செங்கல்பட்டு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் 496 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆகியவை உள்ளன.
இத்தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் கஜேந்திரன், செங்கல்பட்டு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரம்யாவிடம் புகார் மனு அளித்தார்.
அதில், “தொகுதியில் மண்டல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்களைச் சொந்த ஊர்களில் தேர்தல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
அவ்வாறு அவர்கள் பணியாற்றும் பட்சத்தில் ஒரு கட்சி சார்ந்து செயல்படக்கூடும் என்பதால் அவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பணித்தள பொறுப்பாளர்களாகப் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானோர் திமுகவைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களை முழுமையாக தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.