பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு

உயர் நீதிமன்றம், மதுரை.
உயர் நீதிமன்றம், மதுரை.
Updated on
1 min read

மதுரை: பழநி கோயிலுக்​குச் சொந்​த​மான நிலத்தை, மோசடியாகப் ப​திவு செய்​யப்​பட்​டது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்​றக் கோரி அதி​முக எம்.​பி. மகன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​துள்​ளார்.

அந்த மனு​வில், பழநி கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள இடத்தை மோசடி​யாக பதிவு செய்​துள்​ளனர். உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பல்​வேறு உண்​மை​களை மறைத்​துப்பத்​திரம் பதிய உத்​தரவு பெற்​றுள்​ளனர். இந்த பத்​திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயில் நிலப் பதிவை முந்​தைய சார்​ப​தி​வாளர் முடித்​துள்​ளார். ஜஸ்​டின் மணி​கண்​டன் ஆவண எண் வழங்​கி​யுள்​ளார். இருப்​பினும் முந்​தைய சார் பதி​வாளர் பெயரும், ஜஸ்​டின் மணி​கண்​டனை பொறுப்பு சார் பதி​வாள​ராக நியமிக்க மாவட்​டப் பதி​வாளரை​யும் வழக்​கில் சேர்க்​க​வில்​லை.

ஏற்​கெனவே இரு குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும் நிலை​யில் ஜஸ்​டின் மணி​கண்​டனை பொறுப்பு பதி​வாள​ராக நியமிக்​கப் பரிந்​துரை செய்​தது யார், இந்த மோசடிக்கு அவரைத் தேர்வு செய்​தது யார் என விசா​ரிக்க வேண்​டும். பெரிய சதித் திட்​டம் நடந்​துள்​ளது. பதிவுத் துறை உயர் அதி​காரி​களுக்​கும் தொடர்​புள்​ளது. எனவே வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யும்,விசா​ரணை​யைக் கண்காணிக்க உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிப​தியை நியமித்​தும் உத்​தர​விட வேண்​டும்.

உயர் நீதிமன்றம், மதுரை.
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in