தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு தங்கச் சங்கிலி வழங்கி கவுரவித்த ரஜினிகாந்த்!

தூய்மைப் பணியாளர் பத்மாவை கவுரவித்த ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவை கவுரவித்த ரஜினிகாந்த்

Updated on
1 min read

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி அவரை கவுரவித்தார்.

சென்​னை திரு​வல்​லிக்​கேணி, பிள்​ளை​யார் கோயில் தெருவைச் சேர்ந்​தவர் பத்மா (48), தூய்​மைப் பணியாளர். இவர் தி.நகரில், வண்​டிக்​காரன் பகு​தி​யில் கடந்த மாதம் 11-ம் தேதி பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சாலை​யில் கிடந்த பையை எடுத்துப் பார்த்​துள்ளார்.

அதில், 45 பவுன் தங்க நகைகள் இருந்​துள்ளது. உடனடியாக, நகையை பாண்​டி பஜார் காவல் நிலை​யத்தில் ஒப்படைத்துள்ளார். விசா​ரணை​யில், அந்த நகைகள் நங்​கநல்​லூரை சேர்ந்த பரமேஷ் (46) என்பவருக்கு சொந்​த​மானது என தெரிய​வந்​தது.

மேலும், மீட்கப்பட்ட நகை உரியவரிடம் ஒப்​படைக்​கப்​பட்டது. குப்பையில் கிடந்த நகையை காவலர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்​மாவுக்கு பாராட்டு​கள் குவிந்​தன. இந்த தகவல் அறிந்த முதல்​வர் ஸ்டா​லினும் பத்மாவை பாராட்டி ரூ.1 லட்சத்​துக்​கான காசோலையை அவரிடம் வழங்​கி​னார்.

தொடர்ந்து, சென்னை மத்​திய கோட்​டத்​தில் முது​நிலை அஞ்​சல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் சார்பில் ‘மை ஸ்டாம்பில்’ பத்​மா​வின் ஃபோட்​டோவுடன் அஞ்​சல் தலை வெளி​யிட்டு கவுரவப்படுத்தியது.

இதனிடையே, இன்று நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்துள்ளார். மேலும், தங்கச் சங்கிலியையும் ரஜினிகாந்த் பரிசளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினியின் பிஆர்ஓ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: ”முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கவுரவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>தூய்மைப் பணியாளர் பத்மாவை கவுரவித்த ரஜினிகாந்த்</p></div>
நாடெங்கும் வரவேற்பைப் பெற்ற அரசம்பட்டி தென்னங்கன்று

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in