அபய்குமார் சிங்குக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு

அபய்குமார் சிங்குக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக காவல் துறை​யின் சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யின் பொறுப்பை கூடு​தலாக அபய்​கு​மார் சிங்​குக்கு வழங்கி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தின் சட்​டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமனுக்கு நேற்று முன்​தினம் சுவாசிப்​ப​தில் சிரமம் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார். அங்கு சில மருத்​து​வப் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டன. தொடர்ந்​து, அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். டிஜிபி​யின் உடல்​நிலை சீராக இருப்​ப​தாக​வும் அவர் ஓய்வு எடுக்​க​வும் மருத்​து​வர்கள் அறி​வுறுத்​தினர்.

இதையடுத்து பொறுப்பு டிஜிபி​யான வெங்​கட​ராமன் வரும் டிச.25-ம் தேதி வரை மருத்​துவ விடுப்பு எடுத்​துள்​ளார். இதன்​காரண​மாக டிஜிபி​ பொறுப்பை கூடு​தலாக அபய்​கு​மார் சிங்​குக்கு வழங்கி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

சுமார் 27 ஆண்​டு​கள் அனுபவமுள்ள இவர், தற்​போது ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை டிஜிபி​யாக உள்​ளார். அவருக்கு கூடு​தலாக சட்​டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

அபய்குமார் சிங்குக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு
தமிழகத்தில் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகாரிகள் துணையுடன் கொள்ளை: சென்னை உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in