வீர சாவர்க்கரின் வளமான மரபு தற்சார்பு இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

வீர சாவர்க்கர்
வீர சாவர்க்கர்
Updated on
1 min read

சென்னை: வீர சாவர்க்கரின் வளமான மரபு, தற்சார்பு இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வீர சாவர்க்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களின் சொல்லொணா சித்ரவதைகளை அனுபவித்த சிறந்த தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது. வீர சாவர்க்கர் ஒரு சிறந்த எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் மிகப்பெரிய சிந்தனையாளர். அவரது வளமான மரபு, தற்சார்பு இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in