மங்களூர் ஊராட்சி ஒன்றியம் கல்லூரில் வடிகால் வாய்க்காலில் நடப்பட்ட மின்கம்பம்

கல்லூர் ஊராட்சியில் வடிகால் வாய்க்காலில் அமைக்கப்பட்ட மின்கம்பம்.
கல்லூர் ஊராட்சியில் வடிகால் வாய்க்காலில் அமைக்கப்பட்ட மின்கம்பம்.
Updated on
1 min read

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது கல்லூர் ஊராட்சி. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 15 தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் போது, வடிகால் வாய்க்கால் அருகே மின் கம்பம் நடவேண்டும் என்பதால், அங்கு இடைவெளிவிட்டு வடிகால் அமைக்கும்படி மங்களூர் துணை மின்நிலைய மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். ஆனால், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் வாய்க்காலை பகுதியில் இடைவெளி விட எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒப்பந்ததாரர் வாய்க்காலை இடைவெளி அமைக்காமல், அமைத்து சென்று விட்டார்.

இதையடுத்து மின்வாரி யத்தினர் மின்கம்பம் அமைக்க வந்தனர். அவர்களிடம், அப்பகுதியில் குடியிருப்போர் மின்கம்பம்அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி, வாய்க்காலிலேயே மின்கம்பத்தை நட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி சமூக வலை தளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து கடலூர் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர், மங்களூர் வட்டார் வளர்ச்சி அலுவலரிடம் இதுதொடர்பாக விசாரணைநடத்தினர். மங்களூர் துணைமின்நிலைய உதவிப் பொறியாளரிடம் முறையிட்டதையடுத்து, மின்வாரியத்தினர் மின்கம்பத்தை அகற்றி, குடியிருப்பு அருகே மின் கம்பத்தை நட்டுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in