காரைக்குடியில் ஆலங்கட்டி மழை - சூறாவளி காற்றால் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

காரைக்குடி பெரியார் சிலை அருகே முறிந்து விழுந்த மரம்.
காரைக்குடி பெரியார் சிலை அருகே முறிந்து விழுந்த மரம்.
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடியில் இன்று மாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிநிலையில் இன்று மாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் மழை பெய்தது. இதில் அண்ணாநகர், பர்மாகாலனி, வீட்டு வசதியவாரிய குடியிருப்பு பகுதி, செக்காலை, செஞ்சை, கணேசபுரம், மீனாட்சிபுரம், கோவிலூர் சாலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது.

சிலர் மழையில் நனைந்து கொண்டே ஆலங்கட்டியை சேகரித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்ததால் காரைக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் சூறைக்காற்றும் பலமாக வீசியதால் பெரியார் சிலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையில் கிடந்த மரங்களை தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் அகற்றினர். மழையால் மாலை 5.30 மணி முதல் இரவு வரை மின்தடை ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in