நெரிசல் நேரங்களில் சுமைகளை ஏற்றக் கூடாது: போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்

நெரிசல் நேரங்களில் சுமைகளை ஏற்றக் கூடாது: போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழககிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். ஆனால் 5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுக்கு ஒரு பயணிக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

20 கிலோ வரை ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணத்தில் எது அதிகமோ அதனை வசூலிக்க வேண்டும். 20 கிலோவுக்கு மேல் இரண்டு பயணிகளுக்கான கட்டணம் அல்லது ரூ.20 எது அதிகமோ அதனை வசூலிக்க வேண்டும்.

அதிக பயணிகள் பயணம் செய்யும் நெரிசல் நேரங்களில் சுமைகளை பேருந்தில் ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in