சுவாமிமலை | பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ் மாநில காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

சுவாமிமலை | பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ் மாநில காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்
Updated on
1 min read

கும்பகோணம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சுவாமிமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.

கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சுவாமிமலை பேரூர் தலைவர் ஏ.பகவன்தாஸ் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.கே. சேகர் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சட்ட விரோத கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் யுவராஜா தலைமையில் தமிழக ஆளுநரிடம் வழங்கவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in