தி.மலை அருகே பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

தி.மலை அருகே பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சென்னைக்கு இன்று (மே 16) இரவு அரசு பேருந்து சென்றது. இதேபோல், சேத்துப்பட்டு பகுதியில் இருந்து போளூர் அடுத்த வசூர் கிராமத்துக்கு கார் ஒன்றும் சென்றது. சேத்துபபட்டு அடுத்த கிழக்கு மேடு கூட்டுச்சாலையில் (போளூர் சாலை) பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வசூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலழகன்(39), சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பிரகாஷ்(37) என்பவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த பிரகாஷை மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அப்பளம்போல் நொறுங்கிய கார் மற்றும் பேருந்தை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in