உலக செவிலியர் தினத்தையொட்டி 37 செவிலியர்களுக்கு விருது வழங்கல்

உலக செவிலியர் தினத்தையொட்டி 37 செவிலியர்களுக்கு விருது வழங்கல்
Updated on
1 min read

சென்னை: உலக செவிலியர்தினத்தை யொட்டி 37 செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

உலக செவிலியர் தினத்தையொட்டி தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் கவுன்சில் சார்பில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செவிலியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்தது.

கவுன்சில் தலைவரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருமான ஏ.சண்முகக்கனி தலைமை வகித்தார். கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி, உறுப்பினர் ஏ.எப்.ஆனி ராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சிறந்த செவிலியர், சிறந்த செவிலிய ஆசிரியர், சிறந்த செவிலிய நிர்வாகி, வாழ்நாள் சாதனையாளர் என பல்வேறு பிரிவுகளில் 37 செவிலியர்களுக்கு (19 அரசு செவிலியர்கள், 18 தனியார் செவிலியர்கள்) விருது வழங்கி கவுரவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in