மதுராந்தகத்தில் மின்திருட்டு: ரூ.7.49 லட்சம் இழப்பீடு வசூல்

மதுராந்தகத்தில் மின்திருட்டு: ரூ.7.49 லட்சம் இழப்பீடு வசூல்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தின் சென்னை அமலாக்கக் கோட்டத்தின் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் மதுராந்தகம் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 8 இடங்களில் மின் திருட்டு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், ரூ.7.01 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மின்நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் குற்றத்தை ஒப்புக் கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.48 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின்திருட்டு தொடர்பான தகவல்களை 94458 57591 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in