Published : 27 Apr 2023 06:12 AM
Last Updated : 27 Apr 2023 06:12 AM

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: தமிழகத்தில் மீன்கள் விலை உயர்வு

ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தை தொடர்ந்து, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் கிழக்கு கடற் கரை பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல வில்லை.

இதனால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிலோ 100 ரூபாய்க்கு விற்ற மத்தி மற்றும் சூடை மீன் தற்போது 150 ரூபாய், 800 ரூபாய்க்கு விற்ற சீலா 1,000 ரூபாயாகவும், 300 ரூபாய்க்கு விற்ற கிழங்கான், பாறை, விலை மீன் விலை 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது: தற்போது ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் , கரைவலை மீனவர்கள் மட்டுமே மீன்களைப் பிடித்து வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில், கடல் மீன்களின் விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x