மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

திண்டிவனத்தை சேர்ந்த 40 வயது நபர், கடந்த வாரம்சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர், மேல் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள எம் ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அவரது நுரையீரலை இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 54 வயது நோயாளிக்கு மருத்துவர்கள் பொருத்தினர். கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in