Published : 15 Apr 2023 01:52 PM
Last Updated : 15 Apr 2023 01:52 PM

திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம்: முன்னாள் அமைச்சர் தகவல்

கும்பகோணம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

கும்பகோணம் திருவிடைமருதூர் வட்டங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கோடை காலம் தொடங்கியுள்ளதையொட்டி அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை மடத்துத் தெருவில் மாநகர சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.காமராஜ் திறந்து வைத்து, பழங்கள், இளநீர், நீர் மோர்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதேபோல் தாராசுரம், கொரநாட்டுக்கரூப்பூர், பிள்ளையாம் பேட்டை, திருநாகேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், ஒன்றியச் செயலாளர்கள் கா.அறிவழகன், ஏ.வி.கே. அசோக்குமார், முத்துகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பு. அறிவழகன், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் த.சின்னையன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறும்போது, "கோடைக்காலத்தையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் விரைவில் அமையவுள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x