ஸ்டாலின் மீது சிபிஐ-ல் புகார்: அண்ணாமலை தகவல்

ஸ்டாலின் மீது சிபிஐ-ல் புகார்: அண்ணாமலை தகவல்

Published on

சென்னை: செய்தியாளர்களிடம் அண்ணாமலை மேலும் கூறியதாவது: 2006-11 கால கட்டத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் முதல்கட்டத் திட்டப் பணிக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.14,600 கோடி. இந்தப் பணிக்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக அல்ஸ்டாம் நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ரூ.200 கோடியை லஞ்சமாக கொடுத்துள்ளது. இதில் முதல்வர் மீது நேரடியாக ஊழல் புகாரை சுமத்துகிறேன்.

மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 15% இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in